எதிர் வீட்டு பெட்ரூம் – 5

சென்ற பகுதியின் தொடர்ச்சி..

மறுநாள் காலையில் எழுந்திருக்கும் போது அவளின் நேற்றைய நடவடிக்கைகளை நினைத்துப் பார்த்தேன். ஆனால் வித்தியாசம் நன்றாக தெரிந்தது. நான் அவளை அடைய நினைத்தேன். ஆனால் இங்கு எல்லாம் தலைகீழாக நடப்பது போல் தெரிந்தது.

இல்லை அவள் வெறும் ப்ரண்டாக தான் பார்க்கிறாளா? இல்லை வேறு எதுவுமா? என எதுவும் புரியாமல் குழப்பத்திலே இருந்தேன். நேற்று இரவுக் கூட என் மனச திருடனதை பற்றி பேசும் போது மனசை ஏன் திருடன கேட்டதற்கு அதலாம் சொல்ல முடியாது என சொல்லி விட்டு போனாள்… அதன் அர்த்தம் புரிந்தும் புரியாமலும் குழப்பத்திலே இருந்தேன்.. மொபைல் எடுத்து பார்த்தேன்..

“மிகவும் பிடித்த ஒன்று
தொலைந்து
மீண்டும் என் கையில்
கிடைத்திருக்கிறது..

இனி தொலைத்து விடமாட்டேன்.” காலை வணக்கம் சொல்லி இதை அனுப்பி இருந்தாள்..

அவள் ஏன் இதை எனக்கு அனுப்பினாள் என புரியவில்லை. அர்த்தம் புரிந்தாலும் எனக்கு அனுப்பியதற்கான காரணம் மட்டும் பிடிபடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே கொல்லாமல் கொன்று கொண்டு இருக்கிறாள் இவள். அவளிடம் பேசும் போது கேட்டுக் கொள்ளலாம் என இருந்துவிட்டேன்.

காலை வணக்கம் மட்டும் அனுப்பிவிட்டு என் அறையை விட்டு எழுந்து கீழே வந்து காபியை குடித்துவிட்டு டிவியை பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது எதிர்வீட்டையும் எட்டி எட்டி பார்த்தேன். அவள் எதுவும் தென்பாடுவளா என்று.. ஆனால் அவளை பார்க்க முடியவில்லை.. குரலைக் கூட கேட்க முடியவில்லை.

அன்று மதியத்திற்கு மேல் ஆன்லைனில் வந்து வாட்ஸ்ஆப்ல் மெசேஜ் அனுப்பினாள்..

“ஹாய்.. என்ன பண்றீங்க?”

“ம்ம் தேடிட்டு இருக்கேன்.”

“எதை தேடிட்டு இருக்கீங்க.”

“ம். தொலைச்சத தான தேடுவாங்க..”

“அப்படி என்னத்த தொலைச்சீங்க.?”

“மனச தான்.. நானா தொலைக்கல..?”

“திருடிட்டு போய்ட்டா.. ஒருத்தி.”

“ஓ.. ஐ.. ஸி..”

“அது.. யாரு..?”

“ம்.. உன்ன மாதிரி ஒரு அழகான பொண்ணு.”

“என்ன மாதிரியா..? அவ எப்படி இருப்பா? சொல்லுங்க..”

“உன் மாதிரியே அழகான முகம், அளவான உடம்பு, அழகான பேச்சு, எல்லாமே உன்ன மாதிரி தான்..”

“ம்ம்.. ஹலோ விட்டா நா தான் திருடினேன் சொல்லுவீங்க போல..”

“இவ்வளவு நேரம் அததான சொல்லிட்டு இருக்கேன்.”

“என்னது.?”

“நான்லா எதுவும் திருடல..”

“திருடனத யாருமே முதல்ல ஒத்துக்கமாட்டாங்கனு நேத்தே சொன்னேன்.. ஏன் திருடன கேட்டதுக்கு
செல்ல முடியாது சொல்லிட்டு போய்ட்ட..”

“ம்ம். இப்பவும் சொல்றேன்.. சொல்ல முடியாது.. என்ன பண்ணுவீங்க..”

“அப்போ நீ தான் திருடன ஒத்துக்கோ..”

“அதலாம் முடியாது..”

“அப்போ நீ திருடன மனசு(இதயம்)க்கு பதிலா உன்னத என்னட்ட குடுத்திடு..”

“அதலாம் குடுக்க முடியாது.. அல்ரெடி ஒருத்தனுக்கு குடுத்திட்டேன்..”

“அது யாரு.. உன் ஹஸ்பண்ட் தான..”

“இல்ல…”

“ம்ம்.. இல்லையா.. அப்ப யாரு..”

“இல்ல.. ஹஸ்பண்ட் தான் அது..”

“ஏய் பொய் சொல்லாத.. ஃப்ஸ்ட் இல்ல சொன்ன. இப்ப ஆமா சொல்ற..”

“அது தெரியாம சொல்லிட்டேன்..”

“ஆமா… உண்மைய என்கிட்ட தெரியாம சொல்லிட்ட..”

“என்ன உண்மை..?”

“உன் மனச ஹஸ்பண்ட்க்கு குடுக்காம வேற யாருக்கோ நீ குடுத்திட்ட உண்மை..”

“ஹே.. அதலாம் இல்ல சொல்றேன்ல..”

“ஆமா.. நான் சொன்னது தான் உண்மை..”

“இல்ல.. நீங்க சொல்றது பொய்..”

“இல்ல.. அதான் உண்மை..”

“இல்ல.. இல்ல..”

“ஆமா.. ஆமா..”

“இல்ல.. நீ மறுபடியும் பொய் தான் சொல்ற..”

“ஆமா மறுபடியும் பொய் தான் சொன்னேன்.. போதுமா..”

“இது போதுமே..”

“என்ன போதுமே?”

“உன் மனசு உன் ஹஸ்பண்ட் இல்லாம வேற ஒருத்தனுக்கு குடுத்திருக்கியே”

“அது கல்யாணத்துக்கு முன்ன”

“பொய் சொல்லாத”

“இல்ல உண்மை தான் சொல்றேன்”

“இல்ல நீ பொய் சொல்ற”

“உண்மைய தான் சொல்றேன்.. ப்ளீஸ் புருஞ்சுக்கோங்க..”

“கல்யாணத்துக்கு பிறகு யார்கிட்டையும் மனச குடுத்திருக்கிறாயா”

“அது என்ன ரென்ட் ஹவுஸா.. நெனச்சா நெனச்ச ஆளுக்கு எல்லாம் வாடகைக்கு விடுறதுக்கு..”

“ஆமால..”

“ம்ம்.”

“அப்ப ஃபிரியா இருந்தா எனக்கு தரலாம்ல..”

“வாட்..”

“இல்ல. மனசு ஃபிரியா இருந்தா எனக்கு கொஞ்சம் தரலாம்ல”

“ஃப்ரியா இருக்கு யார் சொன்னா..?”

“நீ தான சொன்ன..”

“நானா.. நா எப்போ சொன்னேன்.”

“கல்யாணத்துக்கு முன்ன ஒருத்தன்ட்ட மனச குடுத்திட்ட..”

“இப்ப உன் ஹஸ்பண்ட்க்கு கூட குடுக்கல.. அப்ப ஃபிரியா தான இருக்கு..”

“இல்ல.. முன்ன குடுத்தவன்ட்ட இருந்து இன்னும் வாங்கல..”

“ஓகோ.. மேட்டர் அப்படி போகுதா..”

“எப்படி போகுது.?”

“கவிதை சொல்லியே கரைட் பண்ணிட்ட போல…”

“அதலாம் ஒன்னுமில்ல..”

“ஹே.. எனக்கு தெரியாத.. ஒரு பொண்ணு கவிதை சொன்னா எந்த ஆம்பளையும் அவகிட்ட சரண்டர் ஆகிடுவான்.. எத்தன பேர மயக்கினியோ..”

“ஹலோ.. அப்படி பார்த்த நீங்களும் தான் கவிதை சொல்றீங்க.. நீங்க எத்தன பொம்பளைங்க மயக்கினிங்க..”

“நான் சொல்ற கவிதைய மட்டும் ரசிச்சிட்டு, என்னைய அம்போனு விட்டு போய்ட்டாளுக.. உன்ன மாதிரியே..”

“வாட் யூ மீன்”

“ம்ம்.. எள்ளும் புண்ணாக்கு”

“சொல்ல போறீங்களா? இல்லையா”

“அதான் சொல்லிட்டேன்ல”

“ச்சீ.. என்ன போய் இவ்வளவு கேவலமா நெனச்சீட்டிங்கள.. உங்க கூட பேசுனது என் தப்பு தான் சாரி.. குட் பை”

“ஹேய்.. என்ன ஆச்சு.. உன்ன கஷ்டபடுத்தி இருந்தா.. ஐயம் ரியலி சாரி..”

நான் எவ்வளவு பெரிய வார்த்தை சொல்லி அவளை காயப்படுத்தி இருக்கிறேன் என்று எனக்கு அப்போது தான் புரிந்தது. அவரிடமிருந்து பதில் வருமா எதிர்பார்த்தேன். ஏமாற்றம் தான் மிஞ்சியது.. அவள் ஆப்லைன் போய்விட்டாள். அவளை காயப்படுத்தியது ஒரு மாதிரியாக மனம் வலித்துக் கொண்டே இருந்தது.

அவள் வீட்டில் போய் பார்க்கலாமா? கூட தோன்றியது. அப்படி போய் பார்த்தாலும் அவளின் மாமியார் இருப்பார். நான் பேச நினைத்தது எதுவும் பேச முடியாது.. அதனால் அவள் வீட்டிற்கு செல்லலாம் என்ற எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். அதன் பின் எனக்கு எந்த வேலையும் ஓடவில்லை..

எதுவும் செய்ய பிடிக்கவில்லை.. என் மனதுக்கு பிடித்த பெண்ணை நானே காயபடுத்திவிட்டேன் என நினைக்கும் போது என் மீது எனக்கே சற்று வெறுப்பு வந்தது..

நான் வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியே வண்டியை எடுத்துக் கொண்டு சென்றேன். எங்கே செல்வது என புரியவில்லை. வண்டி செல்லும் இடத்திற்கு எல்லாம் சென்று இரவு ஆனதும் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் வந்து ஆக வேண்டிய கட்டாயத்தில் வந்து சேர்ந்தேன்..

தூக்கம் வராமல் மனம் திரும்பி திரும்பி அவளை காயபடுத்தியதை நியாபகபடுத்திக் கொண்டிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் மாடியில் தம்மை எடுத்து அடித்துக் கொண்டே அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தேன்.. ஒரு கட்டத்தில் கால்வலி எடுக்க மாடி சுவரின் மீது உட்காந்து தம்மை அடித்துக் கொண்டிருந்தேன்.. காலியாக காலியாக மீண்டும் மீண்டும் வரிசையாக எடுத்து அடித்துக் கொண்டிருந்தேன்..

எதேர்ச்சியாக அவள் வீட்டு பெட்ரூமை எட்டி பார்த்தேன்.. அவள் உட்காந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் கணவன் எதுவும் இருக்கிறனா என பார்த்தேன். அவன் கூட இருப்பது போல் தெரியவில்லை.. அதனால் தைரியமாக அவளுக்கு கால் செய்யலாம் முடிவு செய்து கால் செய்தேன். ரீங் அடித்தது.

ஆனால் எதிரில் எந்த சத்தம் வரவில்லை. ஒருவேளை வைப்ரேட் அல்லது சைலண்டில் போட்டு இருக்கலாம். ஆனால் கால் மட்டும் சில வினாடிகள் கழித்து கட் ஆனது. திரும்பி கால் செய்தேன். அதை கட் பண்ணினாள்..

திரும்பி திரும்பி செய்ய கட் பண்ணிட்டே இருந்தாள். கடைசியாக கால் பண்ணும் போது சுவிட்ச் ஆப் வந்தது.. அவளை காயப்படுத்தி இருந்தாலும் மனம் இறங்கி வந்து என் தரப்பு வார்த்தையை சொல்ல நினைக்கிறேன்.. அதை புரிந்துக் கொள்ளாமல் வெறுப்பேற்றுகிறாள்..

அடுத்த நாளும் அவளை தவறாக பேசியதை நினைத்தே என் பொழுது கழிந்தது.

திங்கள் கிழமை காலை மிகவும் சோர்வான மனநிலையுடனே காலேஜ் சென்றேன். வழக்கம் போல குட் மார்னிங் மெசேஜ் அனுப்பினேன். அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. காலேஜில் ஒவ்வொரு முறையும் மெசேஜ் நோட்டிபிகேஷன் சத்தம் கேட்கும் போதெல்லாம் அவள் தான் எதுவும் அனுப்பியிருக்கிறாளா என ஆவலுடன் எடுத்துப் பார்த்து ஏமாந்தேன்.

அன்று காலேஜில் அவளை பார்க்கவில்லை. பார்க்கவும் முடியவில்லை. ஒரு வெறுப்படைந்த மனநிலையோடு வீட்டுக்கு வந்தேன்.. வீட்டிலாவது அவளின் முகம் அல்லது குரல் ஏதாவது தென்படுமா பார்த்தேன். இல்லை..

மூன்று நாட்கள் கடந்து போயிருந்தன. ஜோதி என்னுடன் பேசுவாள் என்ற நம்பிக்கை ஏமாற்றத்தை தந்ததை நினைத்து மிகவும் வேதனை அடைந்தேன். அவள் என்னை நேசித்து இருக்காவிட்டாலும் குரலை கேட்க ஆரம்பித்த அந்த தருணத்தில் இருந்தே என் மனதில் அவளை நினைக்க ஆரம்பித்து நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

அதுவும் அவள் மீதான ஆசை மிகவும் ஆழமாக இருந்தது. அந்த ஆசை என் எண்ணங்கள் முழுவதும் பரவியிருந்ததை என்னால் உணர முடிந்தது. அவள் மீதான எண்ணங்கள் கற்பனை ஓட்டங்கள் காதலா காமமா என்ற மனபோராட்டம் ஒருபக்கம்.

மற்றொரு பக்கம் அவள் திருமணமானவள் எனக்குரியவளாக இருக்க வாய்ப்பில்ல என்ற தர்ம கொள்கை இருந்தாலும் பார்க்காமலே குரலாலே குறுகுறுக்க வைத்து பித்தன் போல் அலையவிட்டாள் என்ற எண்ணம் மற்றொரு பக்கம்.

வியாழக்கிழமை இரவு நான் பார்க்கும் போது அவள் ஆன்லைனில் இருந்தாள். உடனே எனக்குள் ஒரே பரவசம்.. அவள் பேசவாளா பேசமாட்டாளா என்ற கேள்விகளை தாண்டி உடனே அவளுக்கு மெசேஜை அனுப்பினேன்.

“ஹாய்”

அவரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. ஆனால் அனுப்பிய மெசேஜ் படித்துவிட்டாள்.

“ஹலோ.. ஜோதி எப்படி இருக்க”

அதற்கும் பதில் இல்லை.

“உன்ன கஷ்படுத்தி இருந்தா.. சாரி..”

அதற்கு பின் அனுப்பிய மெசேஜ் எல்லாம் படிக்கிறாள். ஆனால் பதில் இல்லை. நான் அனுப்பும் மெசேஜ் படிக்காமல் இருந்துவிட்டால் கூட அனுப்பாமல் இருந்திருப்பேன். அவள் அதை படிக்கிறாள் என தெரிந்தும் என்னால் அனுப்பாமல் இருக்க முடியவில்லை. தொடர்ந்து சில மெசேஜ் அனுப்பினேன்.

கால் நேரத்திற்கு பின் அவளிடமிருந்து பதில் வந்தது..

“நீங்க பேசினது சரியில்ல.. உங்கள மேல வெறுப்புல இருக்கேன்..”

“சாரி.. அது தெரியாம வாய் தவறி..”

“எது வாய் தவறி.. அவ்வளவு கேவலமா சொல்லிட்டு இப்ப வந்து வாய் தவறி சொல்றீங்க”

“ப்ளீஸ் ஜோதி. உன் கோவம் புரியது. என்னை மன்னிச்சிடு.. நானும் வேணும் சொல்லல.. தெரியாம வாய் தவறி வந்தத அனுப்பிட்டேன். வேணும் எதுவும் பண்ணல. இந்த நாலஞ்சு நாளா நீ என்கூட பேசாம இருக்கிறத நினைச்சு நான் நானாக இல்ல. சரியா சாப்பிடல. தூங்கல. எதுவும் ஒழுங்கு இல்லாம ஒரு பைத்தியக்காரன் மாதிரி ஆயிட்டேன்.”

“நீங்க பண்ணது தப்பு. தப்பு பண்ணா தண்டனைய அனுப்பவிச்சு தான் ஆகனும்..”

“சரி. நா பண்ணது தப்பு தான். அதுக்காக பேசாம இருக்காத.. ப்ளீஸ்”

“இல்ல. இருப்பேன்..”

“ப்ளீஸ்.. அப்படி சொல்லாத.. என்னால் தாங்க முடியல…”

“முடியனும்.. நா ஒன்னும் உங்க பொண்டாட்டி இல்ல.. சாரி கேட்டதும் சரினு சொல்ல..”

“நீ சொல்றது புரியது. ஆனா மனசு கேட்க மாட்டிங்குது..”

“கேட்கனும்.. கேட்கலேனா.. அனுபவிச்சு தான் ஆகனும்.. வேற வழியில்ல.”

“இல்ல. என்னால் முடியாது.. ப்ளீஸ் பேசாம மட்டும் இருக்காத..”

“சாரி.. டேக் கேர்..” சொல்லிட்டு ஆப்லைனுக்கு போய்ட்டாள்.. அதன் பின் அனுப்பிய மெசேஜ் அவள் பார்க்க கூடவில்லை.”

அன்று இரவு தூக்கம் என்ற ஒன்று இல்லாமல் போனது. வலுக்கட்டாயமாக கண்ணை மூடினாலும் அவளை பார்ப்பதற்கு முன் கேட்ட அந்த காம குரல் பார்த்த பிறகு பேசி ரசித்த அந்த இன்ப குரல் தான் காதில் மெதுவாக ஒலித்துக் கொண்டே இருந்தது. அவள் என்னிடம் இவ்வளவு சீக்கிரம் பேசாமல் போய்வாடுவாள் என கற்பனையில் கூட நினைக்கவில்லை. அதை நினைத்தே மனதிற்குள் நிறைய அழுதேன்.

அடுத்து வந்த ஒவ்வொரு நாளும் எனக்கு நரகமாகவே இருந்தது. உணவு செல்லாமல் உறக்கம் இல்லாமல் மனம் வருத்தி நொந்து நோய்யுற்றவன் போலானேன்.. அதில் இருந்து மீளலாம் என முடிவு செய்து மனதை மாற்ற முயற்சி செய்தேன். அதுவும் முடியவில்லை. அப்போதும் அவளின் அந்த காம குரல், பேசிய இனிமையான தருணம் தான் நினைவில் வந்து சென்றது.

அடுத்த நாள் காலேஜ் முடிந்ததும் எதேர்ச்சியாக அவளை பார்த்தேன். அவளும் அவள் தோழியும் அவர்களுக்கான காலேஜ் பஸ்ஸில் ஏறுவதற்கு வந்த சமயம் என்னை பார்த்ததும் நின்றுவிட்டாள். அவள் ஏதாவது பேசுவாள் என நினைத்தேன். ஆனால் என்னை பார்த்தும் என்னை தெரியாதவன் போல கடந்து சென்று பஸ்ஸில் ஏறிவிட்டாள்.

பஸ்ஸில் போய் கூட அவளிடம் பேசி மன்னிப்பு கேட்கலாமா? கூட தோன்றியது. அவள் கூட அவளின் தோழி இருந்ததால் இவளிடம் சரியான முறையில் மனசுவிட்டு பேச முடியாது. அதனால் அவளுக்கு கால் செய்தேன்.. போனை எடுத்து பார்த்துவிட்டு கட் செய்துவிட்டாள்..

மதிக்காமல் சென்றவளிடம் இனி போய் பேசினாலும் மதிப்பு இருக்காது என அமைதியாக இருந்துவிட்டேன். இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேச நினைக்கிறேன் கண்டுக் கொள்ளாமல் போனதால் எனக்கு என் மீது இருந்த வெறுப்பு அவளின் மேல் திரும்பியது..

தரிசனம் தொடர்ந்து கிடைக்கும்.

2842400cookie-checkஎதிர் வீட்டு பெட்ரூம் – 5no

Leave a Comment