Tamil Kamaveri நவ்கிக்கு பசி வயிற்றை கிள்ளியது. வயிற்றுக்குள் இருந்த பெருங்குடல் பசியை பொறுக்க முடியாமல் சிறு குடலை தின்னத் தொடங்கியிருந்தது. அவனது வாழ் நாளில்.. இப்படி ஒரு பசியை இன்றுதான் முதன் முதலாக உணரத் தொடங்கியிருந்தான்..!!என்ன கிடைத்தாலும் அப்படியே விழுங்கி விடலாம் போல ஒரு அகோர பசி. !! நவ்கி.. சுத்தமான கிராமத்தான். அவனுக்கு நகரம் புதியது. நகரத்துக்கு அவனும் புதியவன். எனவே யாரைக் கண்டாலும் ஒரு மிரட்சி வந்தது. அந்த பயம் காரணமாக.. கையில் இருந்த காசு தீர்ந்த பின்னரும் அவனது பசியை போக்கிக் கொள்ள பயந்து. . பஸ் ஸ்டாப்பை ஒடடிய சின்ன பழைய சுவர் ஓரமாக ஒண்டிக் கொண்டிருந்தான்.. !! அவன் சாப்பிட்டு.. முழுசாக நான்கு நாட்கள் ஆகியிருந்தது. இந்த நான்கு நாட்களில் கையில் இருந்த காசில்.. டீக்கடை போண்டா தின்று பசியை கட்டுப் படுத்திக் கொண்டிருந்தான். இப்போது காசும் தீர்ந்து போனது. பீடியும் தீர்ந்து போனது..!! அப்படி ஒன்றும் அவன் பெரிய தொகை கொண்டு வந்து விடவில்லை. உயிர் பிழைத்தால் போதும் என்கிற நிலையில்.. அம்மாவுக்கு தெரியாமல் அவளது சுருக்குப் பையிலிருந்து லவட்டிக் […]