இன்பத்தின் உச்சகட்டம் Part 2

சென்னை, பெசன்ட் நகர் அதிகாலை நேரம் இன்னமும் இருட்டு விலகாத சூரியன் கிழக்கில் எட்டிப்பார்க்காத அந்த நேரத்தில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் தங்களது நிழல்களையே பார்த்து தெரு நாய்கள் ஊளையிட்டும், குலைத்துக்கொண்டும் இருந்தன.

பெசன்ட் நகர் போலிஸ் ஸ்டேசன் முன்பு அந்த காலை நேரத்தில் அரக்க பரக்க சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது பைக்கை நிருத்திவிட்டு வேக வேகமான உள்ளே சென்றார்.

வாசலில் காவலுக்கிருந்த காண்ஸ்டபிள்கள் பாதி உறக்கத்திலும், பாதி கண்களை திறந்தபடி அமர்ந்திருக்க.

அவர் அவர்களை மதிக்காமல் நேராக உள்ளே சென்று அப்போதுதான் தனது இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருந்த ஏட்டு மாணிக்கத்தின் முன்னால் சென்று வணக்கத்தை வைத்தார்.

அவரது முகத்தில் தெரியும் கலக்கத்தையும், வியர்வையையும் பார்த்த மாணிக்கம்.

“சொல்லுங்க என்ன விசயம்”

“சார்.. சார்.. ”

பதட்டத்தில் அவரால் சட்டென்று பேசமுடியாமல் திணற

“பொறுமையா சொல்லுங்க சார் என்னன்னு பதறாம”

“கொன்னுட்டாங்க சார் கொலை………” சொல்லியபடியே அவர் பதட்டத்தில் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க, அவரது பதட்டம் இப்போது மாணிக்கத்திடம் தொற்றிக்கொண்டது.

பெசண்ட் நகரின் மாய பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த அந்த 43ம் நெம்பர் வீட்டின் முன்ப அந்த அதிகாலை சூரியன் வெளிவரும் நேரத்தில் கூட்டம் கூடியிருந்தது.

கேட்டின் அருகே ஒரு காண்ஸ்டபிள் நிற்க, வீட்டின் வாசற்கதவின் முன்பு ஏட்டு மாணிக்கமும், இரண்டு காண்ஸ்டபிள்களும் நின்றிருந்தனர். அவர்களுக்கு சற்று தள்ளி 40 வயது நபரும் நின்றிருந்தார்.

“இந்த வீட்டுக் கதவு பூட்டியிருக்கு ப்பாடிய நீங்க எப்படி பார்த்தீங்க?”

“ஜன்னல் வழியா சார் இப்படி வாங்க..’ அவர் அவர்களை பின்பக்கமா அழைத்துச் சென்ற திறந்திருந்த அந்த ஜன்னலை காட்டினார்.

உள்ளே பார்த்த மாணிக்கத்திற்கு மனதை ஏதோ கனமாக்க செய்தது.

உள்ளே ஒருஆணின் உயிரற்ற உடல் ஷோபாவிலும், உயிரற்ற பெண்ணின் உடல் நடு ஹாலிலும் இருந்தது.

இரண்டு உடல்களிலும் உயிர் பிரிந்து குறைந்தது 48 மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கும் என்பது ஜன்னல் வழியாக வெளியேறிய நாற்றம் உணர்த்தியது.

மணி 7 ஐ தொட்ட அந்த நேரத்திற்கெல்லாம் அந்த தெருவில் ஆங்காங்கே கூட்டம் கூடி என்ன..? ஏது..? என அவரவர்கள் பேசிக்கொண்டிருக்க, அந்த போலிஸ் வாகனம் சைரன் ஒலியில்லாமல் சிவப்பு விளக்கைமட்டும் போட்டுக்கொண்டு வந்து நின்றது.|கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ|

ஜீப்பில் இருந்து டைட்டான யூனிபார்மில் க்ரைம் ப்ராஞ்ச் இன்ஸ்பெக்ட்ர் சூர்யாவும் எஸ்ஐ வால்டரும் இறங்கினர்.
சூர்யாவை பார்த்ததும் அந்த தெருவில் ஆங்காங்கு நின்றிருந்த கும்பல் கலைந்து இருந்த இடம் தெரியாமல் காலியாகின.

தெருவை தனது கண்களால் அளந்துக்கொண்டே சல்யூட் வைத்த காண்டபிள்களுக்கு தலையசைத்தபடி அந்த வீட்டிற்குள் இருவரும் நுழைந்தனர்.

அவர்களுக்கு முன்னரே வந்திருந்த பாரன்சிக் குழு சில இரசாயணங்களை அங்கு ஸ்ப்ரே செய்து நாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

அவர்களது தடயவியல் சோதனைகளை அவர்கள் நடத்திக்கொண்டிருப்பதை பார்த்தபடி இருவரும் மாணிக்கத்தின் அருகே சென்றனர்.

மாணிக்கத்தின் சல்யூட்டை ஏற்றபடி சூர்யா

“மாணிக்கம்”

“சார்”

“கம்ளயின்ட் பன்னது யாரு”

‘இவர்தான் சார்’ பக்கத்தில் நின்றிருந்தவரை அறிமுகம் செய்தார்.

“உங்க பேரு”

“சத்யம், பக்கத்து வீடுதான் என்னனோட வீடுங்க சார்”

“ஐசி, பாடிய நீங்கதான் முதல்ல பார்த்தீங்க இல்லயா?”

“ஆமாங்க சார், உடனே பதட்டம் அதிகமாயிருச்சு என்ன பன்றதுன்னே தெரியல அப்புறம் தான் யோசிச்சு போலிஸ் ஸ்டேசன் பேனேன்”

“ம்ம், செத்தவங்க ரெண்டு பேரும் ஹஸ்பன்ட் அன்ட் வைப்பா?”

“ஆமாங்க சார் சுரேஸ் அன்ட் ஜெயந்தி ரெண்டு பேரும் ரொம்ப நல்ல டைப் கல்யாணமாகி இப்பதான் ஒரு வருசம் ஆகுது”

“உங்களுக்கு நல்ல பழக்கமா அவங்க?”

“ஆமாங்க சார் இந்த வீட்ட அவங்க சொந்தமா வாங்கி இந்த ஏரியாவிற்கு வந்தப்ப இருந்தே நல்ல பழக்கம்”

“ஓகே, எதுக்காக அவங்க வீட்டு ஜன்னல்ல அந்த மார்னிங் நேரத்துல நீங்க எட்டி பார்த்தீங்கன்னு சொல்ல முடியுமா”

சூர்யாவின் கேள்விக்கு சத்யம் பதில் சொல்லும் முன்பு வால்டர் சூர்யாவின் காதருகே சென்று

“எனக்கென்னவோ இந்தாளு அவங்க காலையில குஜால் பன்றத டெய்லி வாச் பன்னுவான்னு தோனுது சார் ம்ம்ம்”

வால்டரை சற்று முறைத்து பார்த்த சூர்யா மறுபடியம் சத்யத்தை பார்க்க

“சார் ரெண்டு நாளா இந்த வீடு வெளிப்பக்கமா பூட்டியிருந்தது, சரி எங்கயாவது வெளியூருக்கு போயிருப்பாங்கன்னு நானும் கண்டுக்கல, இன்னிக்கு மார்னிங் நாற்றமடிக்குறத வச்சு தேடிட்டு வந்து ஜன்னல்ல பார்த்தப்பறம்தான்”

அவர் கண்கலங்குவதை பார்த்தபின்னர் விசாரனையை நிறுத்திக்கொண்ட சூர்யா அந்த வீட்டின் ஒவ்வோரு பகுதியையும் அலச ஆரம்பித்தார்.

வால்டர் சத்யத்திடம் மேலும் சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்.

மருத்துவக்குழு சற்று அழுக ஆரம்பித்திருந்தத உடல்களை அங்கேயே போர்ஸ்ட் மார்டம் செய்ய ஆரம்பித்தனர்.

தங்களது அலசல்களை விரைவாக முடித்த சூர்யாவும், வால்டரும் வீட்டை விட்டு வெளியேறி ஜீப்பிற்கு அருகே வந்து நின்றனர்.

பின்னாலேயே வந்த மாணிக்கம்

“சார்ர்ர் நைட் டூட்டி ஓவர் டைம் வேற ஆயிடுச்சு” தயக்கத்துடன் கூற

“ஓகே மாணிக்கம் நீங்க கௌம்புங்க நாங்க டாக்டர்ஸ் ரிப்போர்ட் வாங்கிட்டு கௌம்புரோம்”

“தேங்க்ஸ் சார்” மாணிக்கம் தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு செல்வதை பார்த்தபடி சூர்யா ஒரு 555 சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்த வால்டர் அதை லைட்ரால் பற்ற வைத்தபடி,

“இரண்டு நாளா உள்ளேயே பாடிங்க இருந்திருக்கு ஆனா யாரும் பாக்கல சார், பட் அந்த சத்யம் நல்ல டைப்பாதான் தெரியுது, பட் எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு அந்தாளு மேல”

“ஹாஹா வால்டர் நீ வர வர போலிஸ் மாதிரி யோசிக்குறதா நெனச்சுட்டு குழந்ததனமா யோசிட்டு இருக்க”
புகையை ஊதியபடி சூர்யா சொல்ல வால்டரின் முகத்தில் குறும்பு புன்னகை தோன்றியது.

“யாரும் கொலையும் பன்னிட்டு போலிஸ் ஸ்டேசன்ல கம்ப்ளயின்டும் தரமாட்டாங்க. சரி எத வச்சு அந்தாளு மேல நீ சந்தேகப்படற?”

“அந்தாளு முழியே சரியில்ல சார்”

“உன் முழி கூடத்தான் சரியில்ல நீதான் பன்னன்னு சொல்லலாமா?”

“சார்ர்ர்ர்ர் ஒரு கெஷ்தான்”

“அத விடு, அக்கம் பக்கம் வீடெல்லாம் போய் சுரேஸ் அன் மிசஸ் சுரேஸ் பத்தி விசாரிசுட்டு வா போ”

வால்டர் ஒரு கையடக்க டேப்பை(Tab) எடுத்தபடி எதிர்வீட்டை நோக்கி நடக்க.

சூர்யா சற்று தொலைவில் நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுவனை அருகே அழைத்தான்.

“உம்பேரென்ன தம்பி”

“விஷால் சார்”

“நைஸ் நேம் இந்த வீட்ல இருக்குற சுரேஸ் உனக்கு தெரியுமா”

“நல்லா தெரியும் சார் ரொம்ப நல்ல அண்ணன்.. சன்டேன்னா அவர் எங்க கூட கிரிக்கெட்லாம் விளையாட வருவாரு, அந்தக்காவும் ரொம்ப நல்லவங்க சார் என்னாச்சு சார்? செத்துட்டாங்களா”

சிறுவன் விளங்காமல் கேட்க, அவனை ஒன்றுமில்லை என கூறி அனுப்பிவிட்டு மீதமிருந்த சிகரெட் துண்டை காலுக்கு அடியில் போட்டு மிதித்தபடி மீண்டும் உள்ளே இருந்த டாக்டர்களை நோக்கி சென்றான்.

உள்ளேயிருந்த இரண்டு உடல்களும் சுத்தமாக பேக் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் நோக்கி சென்றுக்கொண்டிருந்தன.

Leave a Comment