இன்பத்தின் உச்சகட்டம் Part 1

சித்தூர் இரயில்வே நிலையம்.

சூரியன் மேற்கில் மறைய துடித்துக்கொண்டிருந்த மாலை நேரம், மழை மேகங்கள் அப்பகுதியை சற்று இருள் சூழ்ந்ததாகவே அடித்திருந்தது. காற்றும் சற்று சில்லென்று தென்றலாக வீசிக்கொண்டிருந்தது. பயணிகள் தத்தம் ப்ளாட்பாரங்களை தேடிச் சென்றுக்கொண்டிருந்தனர்.

கிழக்குத் திசையில் லேசான இடிச்சத்தம் கேட்கத்துவங்கிய அதே நேரத்தில், நிலையத்தின் ஒலிப்பெருக்கியில் கொய்ங்ங் என்ற சப்தத்தை தொடர்ந்து “பயணிகள் கவனத்திற்கு மும்பை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் வண்டி எண் 16381 சரியாக 4.50 க்கு ப்ளாட்பார்ம் நெம்பர் 2க்கு வந்து சேரும்”, என்ற அறிவிப்பு இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மற்றும் தமிழ் என பல மொழிகளில் ஒலித்தது.

ப்ளாட்பார்ம் நெம்பர் 2ல் இருந்த பயணிகள் வண்டி வரும் திசையை உற்று நோக்கத் துவங்கினர், டிக்கெட் கவுண்டர்களில் இருந்த சிலர் வேகமாக டிக்கெட்களை பெற்றுக்கொண்டு ப்ளாட்பார்ம் நோக்கி ஓடத் துவங்கினர்.

அப்படி ஓடியவர்களில் அந்த இளம் ஜோடிகள் அனைவரது கண்களையும் திரும்பி பார்க்க வைத்தனர் என்பதை அங்குள்ளவர்களின் பார்வைகள் அவர்கள் மீது நிலைத்திருந்ததை வைத்து நம்மால் உணர முடிந்தது.

“அய்யோ சீக்கரம் விமல் ட்ரைன் வருவதை அனவுன்ஸ் பன்னிட்டாங்க வேகமாக வா” அப்பெண் அவளது கணவனை தூரிதப்படுத்தியவாறு நடக்க அவனோ அவளது இடுப்பில் கைகளால் சில்மிசங்களை செய்தவாறு இறுக்கியபடி நடந்துக்கொண்டிருந்தான்.

“இப்படி பப்ளிக்கா ச்ச்சீ….” அவளது அழகான அந்த வெட்கம் அங்கிருந்தவர்களின் உணர்ச்சிகளை தூண்டியது.

“என் பொண்டாட்டி நான் எங்க வேணா பன்னுவேன் ம்ம்ம்.”. அவன் சிரித்தவாறு இடுப்பில் இருந்த கையை எடுக்காமல் அவளை ப்ளாட்பார்மிற்கு நடத்தி சென்றான்.

க்ரீச்சிட்ட சப்தத்துடன் இரயில் வந்த நிற்க அனைவரும் வேக வேகமாக எறினர். ஜோடிகள் இருவரும் இழைந்தபடியே அந்த கம்பார்ட்மென்டில் ஏறினர்.

இரயில் மெல்ல நகரத் துவங்கியதும் அவன் அவளிடம் கேட்கத் துவங்கினான்.

“ஷாலு…. ஷால்ல்லுலுலுலு…..”

“ம்ம்ம் எப்படா வண்டி ஏறுவோம்ன்னு காத்திட்டிருந்த இப்ப நச்சரிக்க ஆரம்பிச்சுட்ட இல்ல?”

“ப்ளீஸ் ப்ளீஸ்டி நான் லைப்ல் எப்படில்லாம் கற்பனை பன்னி வச்சிருக்கனோ அப்படியெல்லாம் வாழ்ந்து பார்த்துரனும்டி நீ என் செல்ல பொண்டாட்டில்ல புருஷன் ஆசையை நிறைவேற நீயும் ஒத்துழைக்கனும்….”

“நோ நோ நேத்து நீ சொன்னப்பவே நான் சொல்லிட்டேன் எனக்கு புடிக்கலன்னு”

“படிச்ச மாடர்ன் கேர்ல்ன்னு உன்ன செலக்ட் பன்னினேன் நீ என்னடான்னா சை…..”

அவன் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு கடுகடுவென ஆனான்.

இருவரும் சற்று நேரம் பேசாமல் எதிர் எதிர் பக்கமாக பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

தடக் தடக் என்ற இரயிலின் ஓசை அவர்களது இதயத்திலும் எதிரொலித்தது.

அவர்களது இந்த மௌன நேரத்தில் நாம் அவர்கள் இருவரையும் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

விமல், வயது தற்போது 28, நல்ல திடகார்த்தியமான உடம்பு, எப்போதும் கண்களில் மின்னும் குறும்புப் பார்வை, நடுத்தர உயரம்,

“கலர்ன்னா கமல்ஹாசன் கலர்டா”, என அவனது நண்பர்கள் சொன்னாலும், மாநிறம் என்பது அவனை அறிந்த அனைவருக்கும் தெரிந்ததே.

படித்தது பி.ஈ சாப்ட்வேர், நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையில் சொந்தமாக சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்து, அதில் சுமார் 60 பேர் வரை வேலைக்கு அமர்த்தி பெரிய அளவில் இல்லையென்றாலும் மாதம் சில லட்சங்களை இலாபமாக பெற்று நிறைவான வாழ்க்கையை வாழும் சராசரி ஆள்.

Related sex stories :   அதனாலதா அங்கிள் கு என்ன பிடிச்சுர்கு 1

தன்னிடம் வேலைக்காக நேர்முகத்தேர்விற்கு வந்த ஷாலு என்கிற ஷாலினியின் அழகில் மயங்கி லவ்வோ லவ் என அவள் பின்னால் சுற்றி பின்னர் இருவரும் இணைந்து இரண்டு வருடங்கள் அவளோடு சேர்ந்து சுற்றிவிட்டு ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது.

சரியாக முதல் வருட திருமண நாளை மாமியார் வீட்டில் கொண்டாடிவிட்டு இருவரும் ஈரோட்டில் இருக்கும் விமலின் தாய் தந்தையர் வாழும் வீட்டிற்கு செல்ல இரயில் பிடித்துள்ளனர் இப்போது.

ஷாலு என்கிற ஷாலினி, வயது 21, சற்று வட்ட முகம், ஆனால் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் கவர்ச்சி அதில் இருக்கும், குண்டு கருப்பு திராட்சை கண்கள், சற்று தடித்த அவளது உதடுகளை பார்க்கும் அனைவருக்குமே அதை கடித்து சுவைக்க தோன்றும்.

எங்கு எப்படி மேடு பள்ளங்கள் இருக்க வேண்டுமோ அப்படி செதுக்கி வைத்தாற்போல் இருந்தது ஷாலுவின் முழுவடிவம்.
ஆறு மாதங்களாக விமலை தன் பின்னால் சுற்றவிட்டு பிறகு அவன் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு அவன் காதலை ஏற்றுக்கொண்டு கடந்த ஒரு வருடங்களாக அவனோடு கூடி குலாவி ஊர் சுற்றி பலவிதங்களில் அவனை புரிந்து கொண்டு இருவரும் மிக்க சந்தோஷமாகவே வாழ்ந்து வருகின்றனர்.

ஒரே ஒரு விசயத்தில் மட்டுமே இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதமும், இப்போது பார்த்தோமே இப்படி சிறு சிறு சண்டைகள் ஏற்படும்.

விமலின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் ஈரோட்டில் உள்ளனர். ஆனால் விமல் மற்றும் ஷாலு இருவரும் சென்னையில் தனிக்குடித்தனத்தில் உள்ளதால், நேரத்தை எப்போது வீணடிப்பதில்லை.

அப்படி என்னதான் இருவருக்கும் சண்டை? அந்த ஒரு விசயம் தான் என்ன?

விமலைப்பற்றிய ஒரு முக்கிய குறிப்பு சிறு வயது முதலே மனதில் வித்தியாசமான ஆசைகளை வளர்த்துக்கொண்டு அதை நிறைவேற்றி அனுபவிப்பதில் அவனுக்கு ஒரு பரம திருப்தி வெறி எனவும் கூறலாம்.

அது போல் வாழ்வில் மற்றவர்களுக்கு இல்லாத ஒரு சில ஆசைகளை அவன் தனது வாழ்வில் லட்சியங்களாக கொண்டு வாழ்ந்து வருபவன்.

அந்த இலட்சியங்களை பட்டியல் இட்டால் பல பக்கங்களை தாண்ட வேண்டி வரும் என்பதால் சுருக்கமாக சொல்லபோனால், தனது திருமணத்திற்கு பிறகு வெளிப்டையான இல்லற மற்றும் பேரின்ப சுகங்களை வித்தியாசமான முறையில் செய்து அனுபவிக்க வேண்டும் என்பது அவனது லட்சியங்களில் அடிப்படையானது.

அதற்காகவே பல பெண்களை அவன் வீட்டில் உள்ளவர்கள் பார்த்த போதெல்லாம் தள்ளிவிட்டு, மாடர்ன் பெண்ணாக இயல்பாக உள்ளவளாக என ஷாலுவை தேர்ந்தெடுத்தான்.

ஆனால் திருமணத்திற்கு பின்பு அவள் சராசரியான பெண்ணாகவே நடப்பது அவனக்கு சில சமயம் கோபத்தையும், எரிச்சலையும் வரவழைத்தது.

முதல் இரவின் அன்று அப்படிதான் அறைக்குள் விளக்கு வெளிச்சத்தில் மேட்டர் செய்யலாம் என இவன் கூற அவள் முடியாது என மறுத்து அடம்பிடிக்க முதலிரவு மறுநாள் இரவன்று அவள் வேண்டா வெறுப்பாக அவனது ஆசைக்கு சம்மதித்த பின்பு அவர்களுக்குள் முதல் இரவு நடந்தது.

அதன் பிறகு வெளிச்சம் தானே என அவளும் ஒத்துழைக்க அவர்களுக்குள் அந்த சண்டையும் ஒய்ந்தது.

அதன் பிறகு ஒரு நாள்,

“ஷாலுலுலுலுலுலுலுலு…..”

“என்னடா ரொம்ப சந்தோசமா என்ன விசயம் ரொமன்டிக் மூட் போல”

“எஸ் ரொம்ப நாள் ஆசைடி இன்னிக்கு நாம இந்த சிடில இருக்குற எல்லா பொஷிசன்ஸ்லயும் டிரை பன்ன போறோம்”

Related sex stories :   சொக்கவைக்கும் சோபனா

“என்னது அது”

அவன் அதை சிடி ப்ளேயரில் போட்டுக்காட்ட..

“நோ நோ நோ அது முடியாது, மேட்டர் ஓகே ஆனா இப்படி வேணாம்…….”

மறுபடியும் சண்டை.. இரண்டு நாட்களில் அவளே “சரிடா ஒகே” என்ற பின்னர் மீண்டும் இன்ப வெள்ளம் பாய நாளடைவில் அவன் சில சில ஆசைகளை ஒவ்வொன்றாக அவளுக்கு புரிய வைத்து அதில் கரைக்கண்டான்.

தற்போது மறுபடியும் சண்டை,

நேற்றிரவு மாமியார் வீட்டில் முதல் வருட வைபவத்தை களித்து, பிடித்து உண்டு கொண்டாடிவிட்டு ஓய்ந்த பின்னர்.

“ஷாலுலுலுலுலுலு ஷால்ல்ல்ல்”

“அய்யோ மறுபடியும் ஏதோ சொல்ல ஆரம்பிச்சிட்டியா’

“ஆமாம்ன்டி எனக்கு ஓடுற இரயில்ல செம்மயா செஞ்சு அனுபவிக்கனும்னு ஆசைடி நாளைக்கு டிரை பன்னுவோமா?”

“அய்யோ வேணாம்டா பப்ளிக் ப்ளேஸ்ல நான் மாட்டேன்பா ரொம்ப கம்பல் பன்னன்னா வை வர்ர கோபத்துல என்ன பன்னுவேன்னு எனக்கே தெரியாது மூடிட்டு படு”

“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்டி என் செல்ல கண்ணுல்ல என் அழகு குட்டில்ல நான் என்ன இன்னொருத்திகூடவா பன்னனும்னு கேட்டேன் உன் கூட, என் செல்ல பொண்டாட்டிகூடத்தானடி”’

“ஏன்டா எப்படி நீ இப்படில்லாம் யோசிக்குற, நீயா இப்படி திங்க் பன்னுவியா இல்ல…..”

“இது போல அய்யாட்ட இன்னும் பல ஐடியா இருக்கு செல்லம்”

“எல்லாத்தையும் மூடிட்டு தூங்கு”

அதன் பிறகு காலையில் சமாதானம் ஆகி பகலில் கலவியலில் களித்துவிட்டு, இப்போது இரயில் ஏறும் நேரம் மறுபடியும் அவளிடம் அதை கேட்கத்துவங்கி கோபத்தில் முடிந்தது.

மெதுவாக ஷாலு திரும்பி அவனை பார்த்தாள். இன்று பகல் ஆட்டத்தின் போது அவன் கூறியது நினைவிற்கு வந்தது.

“ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ என்னடி ம்ம்ம்ம் உன்து எப்ப எப்படி பன்னாலும் சலிப்பே வரல தினம் தினம் புதுசாவே இருக்கு”

“அது என்ன ம்ம்ம்ம்”

“இது’ என அவன் விரலை வைத்து காட்ட

“ச்ச்ச்ச்ச்ச்சீசீசீ………….”

அதை இப்போது நினைத்ததும், லேசாக அவளது உதடுகளில் புன்னகை தோன்ற

“விமல்”, அவன் திரும்பவோ பேசவோ இல்லை, அமைதியாக இருந்தான்.

“டேய்….“ஓக்கே ஓக்கே ஆனா ஒரு டவுட்”

அவள் ஓகே என்றதும் கண்களில் பிரகாசத்துடன் திரும்பியவன், டவுட் என்றதும் அவளை உற்று பார்த்தான்.

“இரயில்ல எப்படி எல்லார் முன்னாலுமா? அய்யோ ச்சை.. அது நல்லாவா இருக்கும்”

“மண்டு மண்டு…. இரயில்லன்னா வாஷ்ரூம்ல வச்சு பன்னலாம்னு” அவளது காதருகே சென்று கிசுகிசுப்பாக கூறியபடி அவளது காது மடல்களை கடித்து உணர்ச்சிகளை ஊட்ட துவங்கினான்.

“எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்குடா”

“அதெல்லாம் இருக்காதுடி நீ வா நான் சொல்லுரேன்”

அவளை இழுத்துக்கொண்டு சென்றவன், கூட்டம் குறைவாக இருந்த ஒரு கம்பார்ட்மென்ட்டின் பாத்ரூமிற்குள் நுழைந்து அதை தாளிட்டான்.

இவர்களை தொடர்ந்து பார்த்து ஷாலுவை சைட் அடித்துக்கொண்டிருந்த சில காலேஜ் பயல்கள் அவன் அவளை பாத்ரூமிற்குள் தள்ளிக்கொண்டு போவதையும் கவனித்து விட்டு தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டனர்.

உள்ளே நுழைத்ததும் விமல் அவளது உடைகளை வேக வேகமாக களையத் துவங்கினான்.

Updated: September 15, 2021 — 8:22 AM

Leave a Reply