வருண் கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் இரு ப்ளீஸ் – பாகம் 1

வணக்கம் நண்பர்களே, இந்த கதை கற்பனை அல்ல முற்றிலும் உண்மையாக நடந்த ஒன்று நிகழ்வு. பெயர் இடம் கதாபாத்திரங்களின் அடையாளம் சில மாற்றங்களோடு பகிரப்படுகின்றன.

5 வருடங்களுக்கு முன் இந்த நிஜத்தின் பெயர் மாற்றப்பட்ட கதாபாத்திரங்கள்

கதையின் நாயகி சரஸ்வதி வயது 30
நாயகன் என்று கூற இயலாத நான் வருண் வயது 29
காயத்ரி வருணின் தங்கை
நளினி வருணின் தாய்
பத்மாவதி சரஸ்வதியின் தாய்
சரஸ்வதி மற்றும் வருண் இருவருக்கும் தந்தை இல்லை, இருவருமே தேசத்தின் முக்கியமான அரசு பணியில் இருந்தவர்கள் இருவரும் மத்திம வயதில் இருந்து விட்டார்கள்.

வருண் இன்ஜினியரிங் பட்டதாரி மற்ற இன்ஜினியரிங் மாணவர்கள் போல் இல்லாமல் தனக்கென ஒரு தனி தொழில் பாதையை தேர்ந்தெடுத்து அதில் கணிசமான ஒரு பதவியில் பணிபுரிந்து கொண்டு இருந்தான். ஒரு புதிய மற்றும் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்ற வருண் பெங்களுருவில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவகத்துக்கு தனது பணிநிமிர்த்தமாக சென்று இருந்தான்.

அலுவலக பனி முடிந்து அலுவலகத்தின் விருந்தினர் விடுதிக்கு வந்து சேர்ந்த வருண் தனது முகப்புத்தகக உலகில் பதிவுகளை படித்து முடிக்க அவன் பார்வையில் சரஸ்வதியின் ஒரு குறுந்செய்தி பட்டது. பல மாதங்களுக்கு முன்பு நீ நலமா என்று விசாரித்த வருணுக்கு ” நானா ஏதோ உயிரோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன், நீ நலமா” என்று பதில் வந்து இருந்தது.

இந்த குறுந் செய்தி வருணின் கால சக்கரத்தை சுழற்றி விட்டது..

பள்ளி பருவத்தில் ஜூடோ பயிற்சிகளுக்கு சென்று கொண்டிருந்தான் வருண். ஜூடோ போட்டிகளில் பங்கு பெற சென்றிந்த வருண் அப்போது தான் முதல் முதலாக சரஸ்வதியை சந்தித்தான். அவள் பெயர்கூட தெரியாத வருணுக்கு அவள் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு. அவள் அழகு அவள் நடவடிக்கைகள் அவனை பின்னாளில் ஒரு பெரிய மாய வலையில் தள்ளி விட போகின்றன என்று தெரியாமல் அவளிடம் ஒருதலையாக மனதை பறிகொடுத்தான் வருண். 3 நாட்கள் நடந்த போட்டிகளில் வருண ஒரு போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தான் அனைவரின் கவனத்தில் பதிந்தான். போட்டிகள் முடிந்தன அவர் அவர் வழில இருவரும் சென்றனர். காலம் போனது சரவ்த்தியின் உருவம் மட்டும் அவன் மனதில் ஆழமாக பதிந்து போனது அவளை யார் அவள் பெயர் விலாசம் எதுவுமே தெரியாத வருண் அவளை தேட தொடங்கினான். எந்த பள்ளியின் மூலமாக சரஸ்வதி இப்போட்டிகளில் பங்கு பெற்றாலோ அப்பள்ளியின் சுற்று சுவரை சுற்றி சுற்றி வந்தான் அனால் எந்த வகையிலும் அவனுக்கு அவளை பற்றிய விவரங்கள் கிடைக்க வில்லை.

2 – 3 மாதங்களுக்கு பின்… பள்ளிக்காக குடியரசு தின பயிற்சி அணிவகுப்புகளின் பொழுது ஒரு இமை பொழுதில் சரஸ்வதியும் அவன் பார்வையில் பட்டாள். இம்முறை அவளை தவற விட கூடாது என்று எண்ணினான் வருண். 5 நாட்கள் பயிற்சி பிறகு குடியரசு தினம். ஒரு ஒரு நாளும் எப்படியாவது அவள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தான். அனால் தோற்றான், கரணம் அவன் வளர்புப்ப்பு அவனை தடுத்தது மீண்டும் தன ஆசைகளை தனக்குள் போட்டு புதைத்து கொண்டு வாய் பேச தைரியம் இல்லாத கோழையாய் மறைந்து மறைந்து பார்த்துக்கொண்டு கிடைத்த வாய்ப்பை தவற விட்டான் வருண்

2 வருடம் ஓடிற்று பள்ளியின் கடைசி ஆண்டு மீண்டும் வந்தது குடியரசு தினம்..

இம்முறை மீண்டும் அவளை சந்திப்போம், அவளிடம் நம் ஆசைகளை வெளிப்படுத்தியே தீர வேண்டும் என்று பலத்த எதிர்பார்ப்புகளோடு பயிற்சி அணிவகுப்புகளுக்கு சென்ற வருணுக்கு ஒரு அதிர்ச்சி கிடைத்தது…

அவள் வரவில்லையோ என்று நினைத்திருப்பீர்கள்.. அது தான் இல்லை.. விதி வேறு விதமாய் விளையாடியது. சரஸ்வதி இம்முறை ஒரு லூனா மொபெடில் வந்தால் அதன் பதிவு என்னை வைத்து அவள் விலாசத்தை கண்டு பிடித்து விடலாம் என்று சந்தோஷத்தில் மிதந்த வருணின் தலையில் விழுந்தது ஒரு இடி.. சரஸ்வதியோடு தனது பள்ளியை சேர்ந்த ஒருவன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த வருணுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

பேசி கொண்டு இருப்பது தன் நண்பன் என்று தெரிந்ததும் ஒரே சந்தோஷம். அவள் யார் என்று இம்முறை தெரிந்து கொள்ள தன் நண்பன் உதவி கிடைக்கும் என்று. தன் நண்பனிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் தவிக்க குடியரசு தினம் கடந்தது. பள்ளியில் ஒரு நாள் எப்படியோ தைரியத்தை வரவழைத்து தன நண்பனிடம் வருண் அந்த பெண் யார் என்று கேட்க அவன் அதை சத்தம்போட்டு அறிவிக்க பள்ளியில் அனைவருக்கும் இவன் ஒருதலை காதல் கதை தெரிந்து போனது. பள்ளிக்கு தெரிய படுத்திய நண்பன் மறுநாளே அவளுக்கும் செய்தியை தெரிய படுத்தி விட்டான்.

பள்ளியில் படிக்கும் சகமாணவர்கள் வருணை கிண்டல் கேலி என்று இன்னும் காய படுத்தினர். காதல் புரிவது குற்றமா?? சோகத்தில் வருண்.. இப்படி இருக்க சகமாணவி ஒருத்தி வருணிடம் ஒரு நாள் ஒரு தோலைபேசி என்னை கொடுத்தால். இந்த எண்ணிற்கு 2 முறை missed call கொடுத்த பின் 5 நிமிடம் கழித்து மீண்டும் call செய், உன்னிடம் யாரோ பேச விரும்புகிறார்கள் என்று சொன்னால்.

நீண்ட தயக்கத்துக்கு பின் வருண் தன் தோழி சொன்னபடி call செய்தான். எதிர் முனையில் ஒரு பெண் குரல் வருணின் இதயம் வேகமா துடிக்க ஆரம்பித்தது ” ஹாய் வருண் நான் சரஸ்வதி பேசுறேன் உன்னை பற்றி உன்னோட Friend சொன்னான் பாரு நான் உண்ணவிட ஒரு வகுப்பு குறைச்சலாக இருந்தாலும் வயதில் உன்னை விட பெரியவள் அதனால் உன் காதல் ஆசைகளை ஓரம் கட்டி வைத்து விட்டு உன் படிப்பில் கவனம் செலுத்து” என்றது அந்த குரல். வருண் வியர்த்து கொட்டி, செய்வதறியாது நின்றான்.

கதையை இதுவரை படித்து ரசித்த நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டு கதையை தொடருகிறேன்.
தொலைபேசி துண்டிக்கப்பட்டதும் வருண் சோகத்தில் ஆழ்ந்தான். காதல் மலரும் முன்பே கொய்யப்பட்டது. வருண் மனம் தளர வில்லை. தன்னை விட வயதில் முத்த பெண் என்ற எண்ணம் அவனை ஒரு விதத்தில் தடுத்தாலும் அவன் மனதில் வயதில் மூத்தவள் என்றல் காதலிக்க கூடாது என்று சட்டம் இருக்கிறதா என்றும் யோசிக்க தொடங்கினான். தனக்கு முன்னாள் நிறைய பிரபலங்களின் உதாரணம் இருக்க அவன் முயற்சித்தால் காதலில் வெள்ளம் என்று முடிவு செய்தான், மனதை தேற்றி கொண்டான்.
அவள் பெயர் அவள் தொலைபேசி ஏன் கிடைத்தது, 1999ல் அலைபேசிகள் கிடையாது தோலை பேசிகள் மட்டுமே உபயோகத்தில் இருந்தன. தொலைபேசி என்னை வைத்து அவள் வீட்டு விலாசத்தை கண்டு பிடித்தான் வருண். பிறகு என்ன காதல் வயப்பட்ட அணைத்து வாலிபர்கள் செய்வதை வருணும் செய்தான். ஒரு குறிப்பிட்ட பகுதியில் மீண்டும் மீண்டும் சுற்றி வருவதை நங்கள் முறுக்கு சுடுவது என்று குறிப்பிடுவோம். வருண் சரஸ்வதியின் வீட்டு பகுதியை முறுக்கு சுட்டு கொண்டிருக்க அவள் கவனத்தை கணிசமாக கவர்ந்தான் அவள் குடும்பத்தாரின் கவனத்திலும் வந்தான்.

சரஸ்வதியின் இல்லத்தில் இவ்விசயம் ஒரு பூகம்பத்தை உருவாக்க சரஸ்வதி கோவமாக வருணை அழைத்து கண்டித்தால். ஆனால் இருவருக்கும் ஒரு நெருக்கம் உருவாகிற்று. அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொண்டனர். காதல் வருண் பக்கம் வலுக்க ஆரம்பித்தது அனால் சரஸ்வதி என்ன நினைக்கிறாள் என்று சரஸ்வதி ஒருத்தி மட்டுமே தெரியும். இப்படி இருக்க வருண் பொது தேர்வுகளுக்கு ஆயத்தம் ஆக சரஸ்வதியுடன் ஆன தொடர்புகள் சற்று குறைந்தன. வருண் பொது தேர்வில் தேர்ச்சி பெற்றான் ஆனால் மதிப்பெண்களோ அவன் தரத்தை விட குறைவாக வந்தன. வருணுக்கு மட்டுமே தெரியும் அது ஏன் என்று.

வருண் தன் தந்தையின் ஆசைக்கிணங்க இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தான் இடம் பெயர்ந்து கல்வி கற்க சென்றான். சரஸ்வதியோ அவள் பள்ளியில் இருந்து வெளியேறி வருண் படித்த பள்ளியில் 12ம் வகுப்பு சேர்ந்தாள். காலம் ஒரு இடைவெளியை உருவாக்கியது அதை மேலும் பெரிதாகியது. ஒரு வருடம் கடந்தது அவன் கல்லுரியில் அவன் சரஸ்வதியை விரும்புவது எப்படியோ அவன் ஊரை சேர்ந்த மாணவர்கள் மூலமாக காட்டு தீ போல பரவி கிடந்தது. ஒரே ஊரை சேர்ந்த சகமாணவி ஒருத்தி வருணிடம் வந்து சொன்னால் “வருண் நீ சரஸ்வதியேனும் பெண்ணை விரும்புவதாக எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள், நான் சொல்வதை நம்பு அவள் உனக்கு தகுதியானால் கிடையாது நீ விலகி இருப்பது உனக்கு நல்லது” என்றால். வருணின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த உரையாடல்.

Leave a Comment