நம்பிக்கை உண்மையாகுமா? 1

என் பெயர் ஜெய். உண்மையான பெயர் அல்ல. இந்த கதையும் எனது கற்பனையில் வரும் கதை தான். இந்த கதை ஒரு பயணத்தில் தொடங்குகிறது.

சனிக்கிழமை காலை பெங்களூருவிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். 10 மணி அளவில் வாணியம்பாடி தாண்டும் போது நண்பர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என்று எனது புல்லட் பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு அழைப்பை எடுத்தேன்.

அவர் சென்னையிலிருந்து கிளம்பி பெங்களூருவிற்கு வருவதாகச் சொல்ல. நான் பாதி வழியில் இருக்கிறேன் என்றதும் ஏலகிரியில் இன்று இரவு தங்கிவிட்டு செல்லலாம் என்று வீக் எண்டை கொண்டாட முடிவெடுத்தோம்.

எனக்கு ஏலகிரி 1 மணிநேரப் பயணம் தான். அவர் நீண்ட நேரம் வர வேண்டி இருப்பதால் அவரை கிளம்ப சொல்லிவிட்டு நான் ஒரு டீக்கடையில் அமர்ந்து ரூம்கள் இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தேன். 2 ஆண்கள் தான் பெரிய திட்டமிடல் தேவையில்லை.

தூங்க 1 ரூம். 1 பாட்டில் ரம். ஒரு திறந்த வெளி. இது போதும் என்பதால் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு ரூமிற்கும் போனைப் போட்டு பேசி முடிவெடுக்க நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்த போது தான் அவளைப் பார்த்தேன்.

ஃபாண்டா பாட்டில் கலரில் ஒரு புடவையைக் கட்டி இருந்தாள். உயரம் 5. 6’ இருக்கும். பக்கத்தில் நிற்பது அவள் கணவனாக இருக்கக் கூடும். முன்நெற்றியில் வந்து விழுகும் முடியை இயல்பாய் ஒதுக்கிக் கொண்டே இளநீரை ஸ்டிராவைப் போட்டு உறிஞ்சிக் கொண்டு பேசிக்கொண்டிருந்தாள்.

சட்டென நம் கவனத்தை சில விநாடிகள் புடித்து வைக்கும் பட்டாம்பூச்சி போல. திருத்தமான புருவங்கள். வலது காதோரம் இருந்த சிறிய மச்சம். நீண்ட விரல்கள். மிக மெலிதான சிவப்பு சாயம் பூசப்பட்ட உதடு. அளவிகளை மட்டும் காட்டி அழகினைக் காட்டாதவாறு கட்டப்பட்டிருக்கும் புடவை என பார்த்த 45 நொடிகளுக்குள் மனதில் ஒரு கீறலை ஏற்படுத்தியிருந்தாள்.

குடித்த இளநீரை குனிந்து பொறுமையாக இளநீர் கடைக்காரரிடம் கொடுத்து அவர் அதை சீவி உள்ளிருக்கும் தேங்காயை வெட்டி எடுத்து தரும் வரை குறுகுறுவென அதையே பர்த்துக் கொண்டிருந்த அவளை பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என இதயம் எனை அவளை நோக்கி திருப்பியிருந்தது.

கையில் வைத்திருந்த டீகிளாஸை கடையில் கொடுத்து கணக்கை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக கிளவுஸையும். ஹெல்மெட்டையும் மாட்டிக் கொண்டு தயாரானேன்.

நண்பர் ஏலகிரி வர குறைந்தது 2. 30 மணிநேரமாவது ஆகும். அடுத்த ஒரு மணிநேரம் இந்த அழகு பதுமை எங்கே சொல்கிறாள் என்று பார்ப்போம். நேரம் நன்றாக இருந்தது என்றால் ஏதாவது தெரிய வரும் என்று இதயம் சொல்லிக்கொண்டேயிருந்தது.

ஒருவேளை அவள் நெடும்பயணம் போகிறவள் என்றால் ஒரு மணிநேரம் வீண் என்று முளை சொன்னதை கேட்கும் மனநிலையில் நான் இல்லை. இந்த அழகிக்காக 60 நிமிடத்தை வீணாக்கலாம் என்று முடிவு செய்து விட்டு காரில் ஏறிய அவளை பின் தொடர தொடங்கினேன்.

நேரம் மிக நன்றாக இருந்திருக்க வேண்டும். அவளது கார் மெயின் ரோட்டில் இருந்து விலகி ஜவ்வாது மலைக்க செல்லும் வழியில் செல்ல ஆரம்பித்தது. அங்கிருக்கும் ஒன்றிரண்டு ரிசார்ட்டுகளில் அவள் தங்கினால். அதற்கு அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு இடத்தை நாம் பார்க்கலாம். நண்பனிடம் சொல்லி இங்கே வரச்சொல்லி விடலாம்.

எதிர்பார்த்தது போலே ஒரு ரிசார்ட்டுக்குள் சென்று கார் நின்றது. காரின் பின்புறம் இருந்து அவள் இறங்கும் போது தான் கவனித்தேன் மெலிதான அந்த கொலுசுக்கு மேலே குட்டி குட்டியாக முளைத்திருந்த கெண்டைக்கால் ரோமங்களை.

மஞ்சள் நிறத்தில் இருந்த அவள் மேனியில் அந்த மெல்லிய கருநிற ரோமங்கள் எட்டி நின்று பார்க்கும் போதே இம்சித்தது. மெதுவாக பைக்கை பின்னோக்கி தள்ளிக்கொண்டே சென்றேன். அவள் கணவன். ஒரு வயதான தம்பதி உடன் மெதுவாக நடந்து சென்றவள் திரும்பி கதவருகே நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்தாள்.

எவ்வளவு நேரமாக கவனித்தாள் என்று தெரியாது ஆனால் கவனித்திருக்கிறாள் போல. மெலிதாக அவள் புருவங்கள் ஏறி இறங்கியது ‘இவ்வளவு தூரம் வந்து விட்டாயா’ என்பதைப் போலிருந்தது.

அவ்வளவு தான் இன்றைய காட்சி முடிந்தது என கிளம்பத் தயாரான நேரத்தில் அவள் கணவன் மெதுவாக வெளியே வந்து ஒரு ஒளிவான இடத்தில் நின்று கொண்டு சிகரெட்டைப் பற்ற வைக்க நத்தனித்தவன். மெதுவாக தீப்பெட்டியைத் தேட ஆரம்பித்தான்.

தலையில் அடித்துக் கொண்டே வெளியே வந்தவன் சந்தேகிப்பதற்குள் எனது பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து அதைப் பிடிப்பதற்காக நின்று கொண்டிருந்ததைப் போல நின்று கொண்டேன்.

மெதுவா சிகரெட்டை எடுத்துட்டு அப்படியே என்னை நோக்கி வேகமா வந்தவன் தீப்பெட்டி இருக்கா அப்படின்னு கேட்டான். சிகரெட் படிக்கிறவங்களுக்கு நடுவுல ஒரு பிரண்ட்ஷிப் வேகமா வந்துரும். எங்க சார் பெங்களூரா அப்படின்னு கேட்டான் அவன் என்னை பார்த்து.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு போயிட்டு இருக்கேன். போற வழியில ஒரு நாள் இங்க ஸ்டே. ஒரு பிரண்டு ஊர்ல இருந்து வரேன்னு சொல்லி இருக்கிறார்.

Related sex stories :   நானும் ஒரு கொடீஸ்வரனோட பொண்டாட்டியும்

ஓ… சோலோ ட்ராவலர் ஆ நீங்க?

‘அப்படியெல்லாம் இல்ல. சும்மா அப்பப்போ. எப்ப டைம் கிடைக்குதோ. அப்ப எல்லாம் பைக் எடுத்துட்டு அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வருவேன்’ அப்படின்னு சொன்னேன்.

எங்கெல்லாம் போயிருக்கீங்க அப்படின்னு அடுத்த கேள்வியை ஆரம்பிச்சு ஒரு சிகரெட் முடியறதுக்குள்ள ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன நட்பு உருவாகி இருந்தது.

அவன் பேரு வாசு. சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பாத்துட்டு இருக்கான். மனைவி. அவனோட அப்பா. அம்மாவோட வீக் எண்ட்க்கு இங்கே வந்து இருக்கான். சென்னையில வேளச்சேரியில் வீடு. கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது. இதெல்லாம் ஒரு சிகரெட்டு குள்ள நடந்த உரையாடல்கள்.

அதுக்குள்ள என் பிரண்டு போன் பண்ண நான் அவன்கிட்ட ஜவ்வாது வந்துட்டேன் மேல எங்கேயும் பாட்டில் கிடைக்காது. நீயே கீழே வாங்கிட்டு வந்துரு. அப்படிங்கறத பேசுறதெல்லாம் கேட்டுட்டே இருந்தான்.

போன் காலை வச்ச உடனே ‘சரி சார். நான் போய் ரூம் தேடுற. நீங்க ஃப்ரீயா இருந்தீங்கன்னா நீங்களும் சாயங்காலம் எங்களோட ஜாயின் பண்ணிக்கலாம். ஒரு பாட்டில் ரம். ராஜா சார் பாட்டு. அப்புறம் இடம் கெடச்சதின்னா கேம்ப் பயர். ’

‘கேக்கவே நல்லா இருக்கு சார். ஆனா வாய்ப்பில்லை. பட் ஒரு வேள எங்கயாவது என் மனைவி கிட்ட இருந்து தப்பிக்க முடிஞ்சதுன்னா. கண்டிப்பா நான் வரேன். இங்கே இருக்கிற ஆட்கள் கிட்ட கேட்கலாம் உங்களுக்கு எங்க ரூம் கிடைக்கும்னு அப்படின்னு நட்போடு உள்ள கூட்டிட்டு போனான்.

நானும் வாசுவும் அந்த ரெசார்ட் காரங்க கிட்ட பேசிட்டு இருக்கும்போது அவனுடைய மனைவி வெளியில் வந்தாள். என்னை கதவு பக்கத்தில் பார்த்த போது மெலிதாக மேலே ஏறிய அந்த புருவம். இப்ப இங்கே உள்ளே அவர் கணவர் பக்கத்துல பார்க்கும்போது நல்லாவே மேல போச்சு. அவ்ளோ பக்கத்துல நிற்கும் போது. புருவம் மட்டுமா தெரிந்தது.

காதுல போட்டிருந்த அந்த சின்ன தோடு. உதட்டுக்கு மேல குட்டி குட்டியா சிறு ரோமங்கள். அழகான கண்ணு. அளவான மூக்கு. தொடச்சு வச்சாப்பல முகம். அப்படியே அவள பாத்துட்டே இருக்கலாம் போல இருந்தது. அவளோட கணவன் அவளுக்கு என்னை அறிமுகம் பண்ணி வச்சான்.

சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அவனைப் பார்த்து ‘இப்ப நீ வந்து போட்டோ எடுக்குறியா இல்லையா? இல்லன்னா நான் புடவை மாற்றி விடுறேன் ‘ அப்படின்னு கணவனை மிரட்டிட்டு வந்த வேகத்தில் உள்ள போயிட்டா.

நானும் அதுக்கப்புறம் அங்கிருந்து கிளம்பி அந்த ரெசார்ட் காரர் சொன்ன ஒரு இடத்தில் வந்து தங்கினேன். எங்க தங்கியிருக்கின்றது வாசுகிட்ட அவனுடைய போன் நம்பரை வாங்கி அவனுக்கு தகவலும் சொல்லிட்டேன்.

அன்னைக்கு சாயங்காலம் நானும் என் நண்பரும் என்னுடைய மோட்டார் பைக்கில் அப்படியே ஊர சுத்திட்டு வரலாம் அப்படின்னு கிளம்பிப் போகும்போது. வாசுவும். அவன் மனைவியும் காலார நடந்து வரலாம்னு வெளியே வந்து இருந்தாங்க. என்ன பார்த்த உடனே வாசு நின்னு பேச. எங்க கிட்ட இருந்து விலகி ஒரு இரண்டடி தள்ளி நின்னா அவ.

ஆனால் கண்கள் அடிக்கடி உனக்கு தைரியம் ஜாஸ்தி அப்படிங்கிற மாதிரி என் மேல ஏறி இறங்கி விட்டு போனதை என்னால உணர முடிஞ்சுது. என் நல்ல நேரம் அதோட முடியல. அன்னைக்கு நைட் 9 மணிக்கு வாசு எனக்கு போன் பண்ணான். வீட்ல எல்லாரும் தூங்கிட்டாங்க. உங்ககிட்ட இன்னும் அந்த பாட்டில்ல சரக்கு இருக்கான்னு.

காரை எடுத்துகிட்டு வந்தா வீட்ல இருக்கிறவங்க முழிச்சிடுவாங்கன்னு. என்ன நீங்க வந்து கூட்டிட்டு போக முடியுமான்னு கேட்டான்.

நானும் போய் அவன கூட்டிட்டு வந்தேன் என்னுடைய நண்பர். நான். வாசு. இளையராஜா பாட்டு. மேல இருக்கிற நிலா பழையகால கதை என்று எல்லாத்தையும் பேசி முடிச்சு கையிலிருந்த 2 ஃபுல் பாட்டில் ரம்ையும் முடித்திருந்தோம். கொஞ்சம் தள்ளாடிட்டிருந்த வாசுவை பைக்கிலே ஏத்திட்டு அவனுடைய ரிசார்ட்டில் போய்விடலாம் என்று போயி வாசலில் வண்டியை நிறுத்தும்போது தான் கவனிச்சேன்.

மிருதுளா. அதுதான் அவ பேரு. தனியா அங்கே போடப்பட்டிருந்த கேம்ப் ஃபயர் முன்னாடி உட்கார்ந்திருந்தாள். தள்ளாடுற வாசுவை மெதுவா தாங்கிப்பிடித்து மிருதுளா பார்க்காத ஒரு தூரம் வரைக்கும் கொண்டு போய் நிறுத்தி விட்டு அப்படியே தப்பிச் செல்ல திரும்பும்போது.

வாசு குடிபோதையில் எங்கிருந்தோ வந்த தைரியத்துல. இங்க வாங்க அப்படின்னு என் கையைப் பிடித்து . தரதரவென்று இழுத்துப் போய் மிருதுளா கிட்ட. இவரு கிட்ட இருக்கிற ராஜாவுடைய playlist பாட்டுக்கள் எல்லாம் அருமையா இருக்கு. நீ கேளேன்’ அப்படின்னு சொல்லிட்டு என்னையும் அவன் பக்கத்துல உட்கார வச்சுக்கிட்டான். மிருதுளா. மிருதுளா பக்கத்துல வாசு.

Related sex stories :   துபாய் சென்று குழந்தை வாங்கினேன்

மிருதுளா எதுத்தாப்புல நான். அமைதியா உட்கார்ந்து. அவ ஏதாவது சொல்லுவாளான்னு அவ கண்ணையே பாத்துட்டு இருந்தேன். அவ வாசுவை ஒரு தடவை பார்த்துவிட்டு என்ன திரும்ப பார்த்து ‘என்ன பாட்டு’ அப்படின்னு கேட்டா. நான் என்னுடைய போனை எடுத்து மூன்று பேருக்கும் நடுவுல வச்சுட்டு பாட்டை ப்ளே பண்ணினேன்.

கண்ணுக்கு இதமா தேவதை மாதிரி ஒரு பொண்ணு. மஞ்சள் முகம் நெருப்பு வெளிச்சத்தில் தகதகன்னு மின்னுது. ஜவ்வாது மலையின் குளிர் ஒரு பக்கம். குளிருக்கு இதமாக நெருப்பு ஒரு பக்கம். மனசுக்கு இதமா ராஜாவுடைய பாட்டு இன்னொரு பக்கம்.

ஐந்தாறு பாடல்கள் போனதுக்கு அப்புறம் மெதுவா பாட்டு கூடவே ஒரு குறட்டை சத்தம். திரும்பிப்பார்த்தேன். வாசு மிருதுளாவின் மடியில் சாய்ந்து அப்படியே தூங்கி இருந்தான். கொடுத்து வச்சவன்… பரவால்ல இவ்வளவு தூரம் பக்கத்துல வந்து உட்காரும் அளவுக்கு நமக்கு நேரம் நல்லா இருந்திருக்கு.

இதுவே போதும் அப்படின்னு அங்கிருந்து கிளம்பிடலாம்னு மொபைல் போனை கையில் எடுக்கப் போனேன். அது வரைக்கும் ஏதோ ஒரு யோசனையில் தொலைந்து போயிருந்தவள். என் கை நகர்ந்த உடனே தான் இந்த உலகத்திற்கு வந்தால் போல வாசுவை பாத்தா. என்ன பாத்தா.

கிளம்பிட்டீங்களா அப்படின்னு கேட்டா.

ஆமா வாசு தூங்கிட்டாரு உங்களுக்கும் தூக்கம் வரும் இல்ல நான் இங்கிதம் தெரியாமல்…. அப்படின்னு இழுக்கிறதுகுள்ள

இவரை உள்ள கொண்டு வந்து வைக்க ஹெல்ப் பண்றீங்களா அப்படின்னு கேட்டா.

3 4 தடவை வாசுவை தட்டி பார்த்தேன் நான்.

அவர் எழுந்திருக்க மாட்டார் என்று எனக்கு தெரியும் அப்படின்னு சொன்னா.

ஒரு பக்கம் அவ. ஒரு பக்கம் நான். அவள் வாசு உடைய இடுப்புல கை போட்டு இருந்தா. கழுத்து பக்கம் கையை போட்டு என்னுடைய கை அவ கழுத்துல உரசும்படி மெதுவா அந்த ரூமுக்கு வாசுவை கூட்டி போனோம். நம்முடைய நல்ல நேரம் முடிந்தது. கிளம்பிடுவோம்ன்னு திரும்ப நடக்க ஆரம்பிக்கும் போது ரொம்ப தேங்க்ஸ் அப்படின்னு சொன்னா.

அவள் குரலும் அவள மாதிரியே அழகுதான்.

: பரவாயில்லைங்க நீங்க திட்டுவேன்னு பயந்து இருந்தேன்.

: உங்களை எதுக்கு திட்டனும்

: இல்ல இவரை இப்படி இங்கே வந்தோம் குடிக்க வச்சுட்டேன் என்று

: அது உங்க தப்பு இல்ல இல்ல பொண்டாட்டியோட வந்திருக்கோம் அப்பா அம்மா இருக்காங்க அந்த அறிவு வாசுவுக்கு இருந்திருக்கணும்

: கிளம்புறேங்க… அப்படின்னு மெதுவா வந்த என் கூடவே வாசல் வரைக்கும் வந்து கேட்டை சாத்திக் கொள்ளும்போது

நீங்க சென்னையா என்று கேட்டாள்.
ஆமாங்க அடையார் என்றேன்.

என்னுடைய சிரிப்பு சற்றே அளவுக்கு அதிகமாக இருந்திருக்கும் போல.

: நீங்க உண்மையிலேயே இங்கே வரதுதான் பிளானா? ஏன்னா. நீங்க அப்படியே ஃபாலோ பண்ணிட்டு வந்த மாதிரி இருந்துச்சு.

: இல்ல நான் ஏலகிரி போக வேண்டியவன் உங்கள பாத்த உடனே அப்படியே ஜவ்வாது மலை பக்கம் வண்டியை விட்டுட்டேன்.

உள்ளே போயிருந்த சரக்கு கொடுத்த தைரியமாய் தெரியல மூளையில தோணினதை யோசிக்காமல் சொல்லிட்டேன்.

அவளோட கண்ணுல சின்னதா ஒரு பொறி வந்து மறைந்த மாதிரி இருந்தது.

: ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி. ரோட்ல பார்த்துட்டு. பின்னாடியே வந்து. என் கணவரை நண்பனாக்கி. அவரை குடிக்க வச்சு. இப்போ அவர் இல்லாமல் தனியா என் கூட பேசிகிட்டு இருக்கீங்க. இல்லை!?

: யுனிவர்ஸ் சில நேரங்களில் நமக்கு சாதகமாக நடந்தக்கும். எனக்கு இன்னைக்கு அந்த மாதிரியான ஒரு நேரம் என்று சொன்னேன்.

சிரிச்சிட்டு ‘நல்லா பேசுறீங்க. சென்னையில் பார்க்கலாம்’ என்று சொன்னாள்.

: பார்க்கிறதுக்கு உங்க நம்பர் வேண்டுமே என்று சொன்னேன்.

காலையில ரோட்ல பார்த்த என்ன நைட் 11 மணிக்கு உங்க கூட தனியா பேச வச்சிருக்கீங்க. சென்னையில் பக்கத்து பக்கத்து ஏரியா தான் அங்க உங்களால பார்க்க முடியாதா என்ன? என்பதை ஒரு சவால் போல் கேட்டாள்

அழகாக இருக்கிறாள். உன் அழகினால் தான் பின் தொடர்ந்து வந்திருக்கிறேன் என்று தெரிந்தும் கூட பயமில்லாமல் சவாலைத் தொடர்கிறாள். சண்டித்தனம் செய்யும் இந்த அழகியின் மெல்லிய முனகல் எப்படியிருக்கும் என்பதைக் தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்தது.

சுடிதாருக்குள் ஒளிந்திருக்கும் அழகுகளும் அவளது கண்களின் சவாலை அப்படியே எதிரொலித்தது.

கழுத்தோரமாய் இருக்கும் சுருள் முடிகளுக்குள் முகம் புதைத்திட துடித்தாலும் கட்டில் விளையாட்டை விட சண்டித்தனம் செய்யும் இவளுடன் இந்த விளையாட்டு இன்னும் சிறிது காலம் விளையாடலாம் என்று தோன்றியது. மெல்லிய நைட்டி உள் ஒளிந்திருக்கும் ரகசியங்களை அவளே நம்மிடம் வந்து தருவாள் என்ற நம்பிக்கை உண்மையாகுமா?

Updated: December 5, 2022 — 9:23 PM

Leave a Reply