விருந்து 4

அவள் மனதில் நான் இருக்கிறேனா? என்று தெரியவில்லை. இனிமேல் அவள் 10வது வகுப்பு பொதுத் தேர்வு என்பதால் பரீட்ச்சை முடிந்து ஏப்ரல் மாதம்தான் வருவாள், என்று அவள் அம்மா சொன்னார்கள்.அவள் அரையாண்டு விடுமுறையை முடித்து அவள் பாட்டி விட்டுக்கு போனாள்.

விருந்து 3→

ஜனவரி 14 போகிப்பண்டிகை, கிராமத்தில் விளையாட்டுப்போட்டிகள் சிறப்பாக நடக்கும், சாட்டிலைட் டி.வி. சேனல்களும், செல்போன்கலும் வராத காலம்,அது…..
அடுத்த நாள் பொங்கல்திருவிழாவையொட்டி நடக்க்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்வதற்கு ஊர்வாலிபபசங்க எல்லாரும் தோரணம் கட்டுவது,விளையாட்டுதிடலை ஏற்பாடு பண்ணுவது, எத்தனை போட்டிகள் நடத்துவது என்று ஆலோசனை பண்ணிக் கொண்டு இருந்தோம்.விழா நடத்துவதற்கு என்று பணத்திற்கு மாணிக்கத்தின் அப்பாவும் , அத்தைவிட்டுகாரர் மாமாவும் கொடுத்து விட்டுவார்கள், என்பதால் நன்கொடை என்று அலைவதில்லை,…இந்த வருடம் ,மாணிக்கத்தின் அப்பா 3 கிலோ எடையில் ஒரு வெள்ளிக்கோப்பை ஊருக்கு அன்பளிப்பாக கொடுத்து இருந்தார்கள்.
18-25 வயதுக்குபட்டவர்களுக்கு கபடி போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு அந்த வெள்ளிக்கோப்பையை சுழல்க்கோப்பையாக கொடுப்பது என்றும்.. ஒரு வாரத்திற்கு பிறகு அந்த கோப்பையை ஊர்மன்றத்தில் வைப்பது என்றும்..ஒவ்வொரு வருடமும் வெற்றிப்பெற்றவர்களின் குழு படத்தையும் ஊர் மனறதில் வைக்கவேண்டும் என்றும் ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இரவு 3 மணிவரையில் வேளை செய்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். எப்போதும் இன்னொரு சாவி என்னிடம் இருக்கும். இரவு டீக்கடை வைத்து இருந்ததால் இரவில்வீட்டுற்கு வந்தால் அம்மாவை தட்டி எழுப்பமால் இருக்க இன்னொரு சாவி என்னிடம் இருக்கும். எனவே, கதவை திறந்து முன் ருமில் அடுப்பங்கரை எதிரில் படுத்துக் கொண்டேன்.மார்கழிப்பனியில் போர்வையை போர்த்திக்கொண்டு தூங்கவதில் உள்ள சுகமே தனிதான்…
ஜனவரி15 பொங்கல் திருநாள்…
“வலதுகாலை எடுத்துவைத்து உள்ளே வாம்மா” என்று என் அம்மா யாரையோ அழைத்துக் கொண்டு இருந்தார்கள்.. நான் போர்வையை விலக்கி யாரென்று பார்த்தேன்..”ப்ரியா” ஒரு பட்டுச்சேலையில் விட்டுக்குள் வலது காலை எடுத்து வைத்து வந்துகொண்டு இருந்தாள்.. நான் கனவு என்று நினைத்துக்கொண்டு திரும்பி படுத்துக்கொண்டேன்.. அவள் அம்மா ப்ரியா ஏப்ரல் மாதம்தான் வருவதாக சொன்னார்கள். அதனால்தான் கனவு என்று நினைத்தேன்..
என் அம்மாவின் குலவைச்சத்தம் கேட்டது…

‘…………..”
“புஸ்பா , நீ ஒரு கை பச்சரிசியை புதுபானையில் போடுமா” என் அம்மாவின் குரலேதான்.
“ ப்ரியா , நீயும்தாம்மா” இதுவும் என் அம்மாவின் குரலேதான்.
அப்படி என்றால்….சடாரென்று போர்வையை விலக்கிக்கொண்டு பார்த்தேன்.
ம்ம்ம்ம்ம் ப்ரியாதான், என் எதிரில்.. இது கனவல்ல…நிஜம்..
“ என்னங்க, பயங்கர தூக்கம் போல” ப்ரியா
“ ஆமாம், இரவு முழுவதும் விளையாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தோம்” என்றேன் நான்.
“அப்படினா, அத்தனை போட்டிக்ளிலும் முதல் பரிசு உங்களுக்குத்தானா?” என்று ப்ரியா கேட்டாள்.
“ வேடிக்கை பார்பவர்ளுக்கு கொடுக்கமாட்டாங்க, அண்ணி” இது புஸ்பா.
நான் புஸ்பாவை முறைத்தேன், என்றலும் அவள் கூறியது உண்மைதான்..நான் எந்த விளையாட்டுப் போட்டியிலும் கலந்து கொண்டது கிடையாது. சும்மா விளையாட்டுப்போட்டியில் நடுவராக இருப்பது,” அதை எடுத்து இங்கு வை,, இதை எடுத்து அங்கு வை “ என்று யாரையாவது வேலை வாங்கிகொண்டு இருப்பேன்.
“ இல்லை, உங்க அண்ணன் நன்றாகவிளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்,நீதான் பொய் சொல்லுகிறாய், அவங்களைப் பார்த்தாலே நல்ல ஸ்போர்ட்ஸ்மேன் மாதிரிதான் தெரிகிறது” என்று என்னைப் பார்த்து சொன்னாள்.
அவள் எதிரில் உட்கார்ந்து இருந்த நான் பின்னால் திரும்பி பார்த்தேன், பின்னால் யாரும் இல்லை , அப்படி என்றால் அவள் என்னைத்தான் சொல்லி இருக்கிறாள்.நான் பின்னால் திரும்பி பார்த்தை பார்த்து புஸ்பா மெலிதாக சிரித்தாள்..” ஒரு நாயகன் உருவாகிறான்..ஊரார்களின்….” என்று தாவணிகனவு திரைபடத்தில் வரும் பாடலை கேலியாக பாடினாள்.

நான் காலை 10.00மணிக்கு விளையாட்டுத்திடலை அடையும் முன்னமே விளையாட்டுபோட்டிகள் ஆரம்பித்து விட்டு இருந்தார்கள்.முதலில் சிறுவர்கள், சிறுமிகளுக்கான போட்டிகள் நடந்து கொண்டு இருந்தன்.
ஒவ்வொரு போட்டியாக நடந்து கொண்டு இருந்தன…. அடுத்து 15 வயதுக்கு மேற்ப்பட்ட பெண்களுக்கான ஸ்கிப்பிங்கயிறுப் போட்டி என்று அறிவித்தார்கள்..அதில் கலந்து கொள்ளுபவர்களின் பெயரில் “ப்ரியா” வின் பெயரும் இருந்தது..நான் ப்ரியா என்ற பெயரைக்கேட்டதும் யாரன்று பார்த்தேன்.. “ப்ரியாதான் என் ப்ரியாதான்”.. எனக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்ப்பட்டது.
ப்ரியா இப்போது சேலை அணியவில்லை , மாறாக ஒரு சுடிதார் அணிந்து இருந்தாள்,,சால் போடவில்லை அதற்கு ப்திலாக ஒரு டி ஷர்ட்டை போட்ட்டு இருந்தாள்..ஏனென்று உங்களுக்குத் தெரியதா என்ன? ஆம் அதற்குதான்..
ஸ்கிப்பிங்ப்போட்டி ஆரம்பித்தது..சரியாக அவள் எதிரில் நான் நின்று இருந்தேன்.” யார் அதிகமான நேரம் விளையாடுகிறார்களோ அவர்கள் வெற்றிப்பெற்றவர்களாக அறிவிக்கபடுவார்கள்’ என்று விழா நடத்துபவர் சொன்னார்கள்.
அவள் மெதுவாக விளையாண்டாள்… நான் அவள் கால்பாதங்களைத்தவிர வேறு எங்கும் பார்க்கவில்லை.
“ வெண்பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சு பாதங்கள்
மண் தொட்டதால் இங்கு செவ்வானம் ஆச்சு” “ நீங்கள் கேட்டவை” படத்தில் வரும் பாடல் என் மனதில் ஒலித்தது.
ஸ்கிப்பிங்கயிறு அவள் காலை நழுவி செல்லும் அழகே அழகுதான்…
“ ஆம், அவள் வெற்றிப்பெற்றதாக அறித்தார்கள்” அது வரை என் சுய நினைவே இல்லை.ப்ரியா என்னிடம் வந்தாள் “இந்தாங்க “ என்று ஸ்கிப்பிங்கயிற்றை என்னிடம் தந்தாள்..
“ ஆண்பிள்ளைக்களுக்கு ஸ்கிப்பிங் போட்டி இல்லை”யேன்று அவள் தோளில் சுடிதார்ஷால் போடுவது மாதிரி கயிறை போட்டேன்..எனக்கு என்னவோ அவளுக்கு மாலை இடுவது போல் நினைப்பு… அவளும் மெலிதாக சிரித்துக்கொண்டே வீட்டுக்குச் சென்றாள்.
மாலை 3.30 மணிக்கு கபடிப்போட்டிக்கு பெயர்கொடுத்தவர்கள் எல்லாரும் திடலுக்கு வரும்படி ஒலிப்பெருக்கியில் அறிவித்தார்கள்.நானும்தான் பெயர் கொடுத்து இருந்தேன்,,,இது கூட செய்யவில்லையேன்றால் எப்படி பாஸ்…மொத்தம் 60 பேர்கள் இருந்தார்கள்.. எனவே 8 அணியாக பிரித்து,A பிரிவில் 4 அணியும். ‘ B’பிரிவில் 4 அணியும் பிரித்தார்கள். லீக் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு தடவை மோதவேண்டும் என்றும், ஒவ்வொரு பிரிவில் அதிகம் வெற்றி பெறும் 2 அணிகளும் அரையிறுதியில் தகுதி பெறும் என்றும்,அரையிறுதில் நாக் அவுட் முறையில் வெற்றிபெறும் அணி இறுதிபபோட்டியில் பஙுகு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
நான் 8வது அணியில் 7வது ஆளாக சேர்க்கப்பட்டேன் என்றால் எனது விளையாட்டுத்திறமையை பற்றிச்சொல்லி திரியவேண்டிய அவசியம் இல்லை.
மாலை 4.00மணிக்கு முதல் போட்டியாக எங்கள் அணிக்கும் , மாணிக்கம் கேப்டனாக இருந்த அணிக்கும் போட்டி நடந்தது…முடிவு நீங்கள் எதிர்ப்பார்தது ப்போலதான்….மாணிக்கம் அணி 25 புள்ளிகள் வித்தியாசதில் வெற்றிப் பெற்றது.
எஙகள் அணியின் கேப்டன் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக சொன்னான்…[சும்மாதான்}].. லீக்போட்டியில் விளையாட அடுத்த 2 போட்டிகளுக்கு யார் கேப்டனாக வருகிறீர்கள் என்று விழா நடத்துபவர்கள் கேட்டார்கள்..மற்ற 5 பேரும் முன் வரவில்லை,,”,நான் கேப்டனாக இருக்கிறேன்” என்றேன்.. எல்லாரும் சிரித்தார்கள் எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. ஊரில் நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்பார்களே அதில் ஒருவன் என் காதுபடவே கூறினான்” தோற்கப் போகிற அணிக்கு யார் கேப்டனாக இருந்தாள் என்ன?.நான் கூனிகுறுகிப் போனேன்.
இந்த க்ளேபரத்திற்கு நடுவில் 2 லீக்ப்போட்டிகள் நடந்து இருந்தன. இப்போது எனது தலைமையிலான அணிக்கும் , இன்னொரு அணிக்கும் போட்டி நடக்கப்போவதாக ஒலிப்பெருக்கியில் அறிவித்தார்கள்.நான் கேப்டனாக மைதானத்தை வலம் வந்தேன்.. எனது பார்வை முழுவதும் பெண்கள் பகுதியில் இருந்தது…ப்ரியாவை எதிர்ப்பார்த்துதான்…ஆம் நின்று இருந்தாள்.. என் அம்மா, என் தங்கை , ப்ரியா அம்மா, ப்ரியா தங்கை என்றுஎல்லாரும் .. கொஞ்சம் தொலைவில்….

ம்ம் விளையாட்டு ஆரம்பித்து விட்டது… நான் சுறுசுறுப்பாக இயங்கினேன். ப்ரியாவின் பார்வை என் மேல் இருப்பதை கவனித்தேன்..மேலும் உற்சாகத்தை தந்தது…அந்த அணி மாணிக்கத்தின் அணிக்கு அடுத்த இடத்திலுள்ள அணி.. எனவே கொஞ்சம் கஸ்டமாகதான் இருந்தது…கடைசி 5 நிமிடங்கள் என்று அறித்தபோது இரு அணிகளும் சமமாக புள்ளிகள் இருந்தன்….” கபடி , கபடி , கபடி என்று சொல்லுவதற்கு பதிலாக என் வாயில் “ப்ரியா ப்ரியா ப்ரியா” என்றுதான் முணுமுணுத்தன்…அந்த வேகம் என்னை பரபரப்பாக இயக்கின…ம்ம்ம் நாங்கள் ஜெயித்து விட்டோம்..என்னாலேயே நம்பமுடியவில்லை.
அடுத்த அணியை ஜெயித்து,,நாங்கள் அரையிறுதிக்கு தகுதியான போது..எங்கள் ஊரே என்னையும் என் அணியையும் அதிசியமாக பார்த்தது. நான் வீட்டுக்குப் போனேன்…இரவு 10.45 மணி இருக்கும்… அதற்கு மேல் இருலீக் போட்டிகள் இருந்தன்..வேறு அணிகளுக்கு…எனக்கு சோர்வாக இருந்தது என்று சொல்லுவதைக்காட்டிலும் ப்ரியா வீட்டுற்கு போயிருந்தாள் என்பதே உண்மை.
“அண்ணா, உன்கிட்ட இவ்வளவு திறமை இருக்கும் என்று நான் எதிரிபார்க்கவேயில்லை” என்று கிழவி மாதிரி புஸ்பா சொன்னாள்.
அடுத்த நாள் காலை 7.30மணிக்கு வேகமாக சைக்கிள் ஓட்டும்ப்போட்டி நடந்தது..நானும் கலந்துக்கொண்டேன்.போட்டி ஆரம்பிக்கும்போதே மாணிக்கம் சொன்னான்.. “ போட்டியின் நடுவே உன் கடைக்கு பால் வாங்க போயிடாதே”என்றான்.
ஆமாம் 2 வருடஙகளுக்கு முன் நடந்தப்போட்டியில் நான் கலந்து கொண்டேன்…போட்டிதூரத்தை நான் முடிக்கும்முன்னரே வேறு இரண்டு போட்டி நடத்தி முடித்துஇருந்தார்கள். அதற்குதான் மாணிக்கம் அப்படி கேலி செய்தான்.
இதோ இந்த வருட சைக்கிள்பந்தயதில் நான் 2வது இடத்தில் வந்து விட்டேன்.கொஞ்சம் பெருமையாகவே இருந்தது…
மாலை 4.00 மணிக்கு நடந்த அரையிறுதிப்போட்டியிலும் நாங்கள் ஜெயித்துவிட்டோம்…இனி இறுதிப்போட்டிதான்…
மற்றொரு அணியாக மாணிக்கதின் அணி இறுதிப்போட்டியில்….
பிரிவு ‘எ” யில் இடம் பெற்ற இரு அணிகளும் பைனலில் இருந்தோம்…
லீக்போட்டியில் 25 புள்ளிகள் வித்தியாசதில் நாங்கள் தோற்றுயிருந்தோம்….
இப்போது பைனலில்… என்ன நடக்கும் …மாணிக்கத்தின் அணி எளிதாக ஜெயித்துவிடும் என்று சின்னபிள்ளையை கேட்டால்கூட சொல்லிவிடும்…
இரவு 8.00 மணி….
இறுதிப்போட்டி ஆரம்பித்தது………..
இரண்டு நாளாக விளையாடிக்கொண்டு இருந்தால் என்னவோ…எனக்கு சுறுசுறுப்பாகவே இருந்தது…
ஆட்டத்தின் முதல் பாதி முடிந்து இருந்தது…
எங்கள் அணி 10 புள்ளிகள் பின்தங்கி இருந்தது….
எல்லாரும் எதிர்ப்பார்த்த முடிவுதான் என்றாலும்…என்க்குள் ஓரு சின்ன நம்பிக்கை இருந்தது…
நான் ப்ரியாவை பாருத்தேன்…அவள் தொலைவிலிருந்து எனக்கு கைகட்டவிரலைக் உயரேக்காட்டி சியர் சொல்லிக் கொண்டு இருந்தாள்..
ம்ம்ம் இராண்டாவது பாதி ஆரம்பித்த சிறிது நேரத்தில் எனது இருவரும் அவுட்டாகி , நான் தனி நின்று இருந்தேன்..இப்போது மாணிக்கம் பாடி[ரெய்டு] வந்தான்…
கேப்டனுக்கு கேப்டன்… ம்ம் சரியான போட்டி என்று அறிவிப்புசெய்தவர் அறிவித்தார்..
நான்கிட்டதட்ட லாபியில் நின்றுக்கொண்டு இருந்தேன்…நான் இப்போது அவுட்டாகி விட்டால் போனஸ் புள்ளி என்று மாணிக்கத்தின் அணி 16 புள்ளிகள் கூடுதால பெற்றுவிடும்… என்ன செயவது அவனை தனியாக பிடிக்க முடியாது….
கிட்ட்தட்ட 6 அடி உயரத்தில் நின்றுகொண்டு இருந்தான்….
அவன் அவனது கைகளை நீட்டி என்னைத்தொட்டு அவுட்டாகும்படி என்று போனஸ்கோட்டிற்கும் மேலே நின்றுப்பாடிக்கொண்டு இருந்தான்…..
அவனை பிடிக்கமுயன்றால் என்னையும் சேர்த்து இழுத்துக் கொண்டு நடுகோட்டை தொட்டு விடுவான்,,,என்ன செய்வது…
ஒரு கணம் அவன் அசந்த நேரம் பார்த்து….
சரியாக அவனது கையைபிடித்த நேரத்தில் என் இருகால்களையும் அவனது இரு கால்களில்…..தென்னைமரத்தில் ஏறுவதுப் போல் கவ்விக்கொண்டேன்.. அவனால் ஒரு அடிகூட பின்னால் எடுத்து வைக்க முடியவில்லை.. என் எடை அவனை என்னைநோக்கி இழுத்தது…… ஆம் அவன் அவுட்டாகி விட்டான்…… இல்லை நான் அவனை அவுட்டாக்கிவிட்டேன்…..
அவனை அவுட்டகி விட்ட வேகத்தில் எங்கள் அணியுன் வேகம் அதிகரித்தது..அவனது அணியை முழுமையாக வெளியேற்றி..போனஸ் புள்ளிகளும் பெற்றொம்……
இப்போது அவன் பாடி வந்தான்..அவனது கோபம் என்மீது இருந்த்து…கோபம் அறிவை மறைக்கும் என்ப்பார்களே..அதனாலென்ன்வோ என்னிடமே மீண்டும் பிடிகொடுத்து ஆட்டமிழந்தான்…இப்போதும் அவனது அணியை முழுமையாக வெளியேற்றி போனஸ்புள்ளிகள் பெற்றொம்….
கடைசி 5 நிமிடங்கள்……. என்ற அறிவிப்பின்போது…நாங்கள் 5 புள்ளிகள் முன்னுக்கு வந்து இருந்தோம்………
இப்பொது அவனது ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு எனது அதிரடியான் ஆட்டத்தை அவனுக்கு பொங்கல் பரிசாக கொடுத்தேன்…….முடிவில்……..நாஙகள் வெற்றிப்பெற்றொம்……….
என்னை ஒருவன் தோளில்தூக்கிக் கொண்டு மைதானதை சுற்றி வந்தான்…….
“கண்ணின் கடைகண் பார்வையைக் கன்னியர்தம் காட்டிவிட்டால்
மண்ணில் மாமலையும் ஒரு கடுகுஆம்”…
.தாசனின் வரிகள் எவ்வளவு உயிரோட்டமானவை…..
கிழே இறங்கிய என்னை அப்படியே தள்ளிக்கொண்டுப்போய் சுவற்றில் சாய்த்து என் தலையை பிடித்து தூக்கிகொண்டு கேட்டான்.
“என்னடா ஆச்சு உனக்கு?”
“ஒன்றுமில்லையே” என்றேன்.
“இல்லை,, நீ எதையோப் பார்த்து பயந்துட்ட .. எதைடா பார்த்த…?
‘நான் பயந்தால் உன் சுண்ணியை பார்த்துதான் பயப்படணும்..அதற்கே பயப்படலை வேறே எதற்குடா பயப்படப் போறேன்..” என்றேன்..நான்.
அப்படியே என் உதடில் எச்சில் படமால் ஓரு முத்தம் கொடுத்தான்.. என்னையும் அவனது தோளில் தூக்கிக் கொண்டுசுற்றி வந்தான்…….
“அவனை எதிர்த்து
என் வெற்றியில்
அவனது சந்தோஷம்
நட்பின் இலக்கணம்”
அடுத்த நாள் இரவு கலைநிகழ்ச்சி முடிந்தபிறகு என் அணிக்கு வெற்றிசுழல்கோப்பை கொடுத்தார்கள்….கேப்டன் என்ற முறையில் அன்று இரவு என் வீட்டிற்கு எடுத்துச்சென்றேன்..
என் தெருவில் என்னை எல்லாரும அதிச்யமாக பார்த்தார்க்ள்..
என் அம்மாவிற்கு பெருமை பிடிபடவேல்லை….
என் வீட்டுவாசலில் கோப்பையுடன் நின்றேன்.
“ஊர் கண்ணே ராஜ் மேல்தான் அவனுக்கு திருஷ்டி சுற்றி போடுங்கள் “ என்று ப்ரியா அம்மா சொன்னார்கள்.
ஊர் கண்ணல்லாம் என் மகன் மீது விழவில்லை,, ஒருத்தி கண்தான் என் மகன் மீது விழுந்து இருக்கிற்து ,பரவாயில்லை அவள் கண்விழுந்ததால் தான் என் மகன் சிங்ககுட்டிப்போல் இருக்கிறான்..அவள் கண் என் மகன் மீது நன்றாக விழட்டும்….நான் சுற்றி போட மாட்டேன்… நீ வேண்டுமென்றான் உன் தம்பிக்கு சுற்றிப்போடு” என்றாள் என் அம்மா…..

ஒரு வாரம் கழித்து ஊர்மன்றத்தில் நானும், எனது கபடி குழுவும் உள்ள போட்டோவை வைத்தார்கள்.நடுவில் நான் கோப்பையுடன் நின்று இருந்த்தேன். அதற்கு முழுகாரணமும் ப்ரியாதான்..இப்போது அவள் மீண்டும் பாட்டிவீட்டுக்குச் சென்று விட்டாள், ஸ்கூல் செல்லதான்.
இந்த வருடம் அவள் 10வது வகுப்பு பொதுத்தேர்வு எழுதப் போகிறாள்.10வது வகுப்பு தேர்வு அட்டவனையை நியுஸ் பேப்பரில் பார்த்தவுடன் வெட்டி எடுத்து எனது கல்லூரி நோட்டில் ஒட்டி வைத்துக்கொண்டேன். எனக்கு 4 வது செமஸ்டர் முடிவதற்கும், அவள்து தேர்வு முடிவதற்க்கும் சரியாக இருந்தது.
இந்த முறை அவள் வந்தவுடன் எனது காதலை தெரிவித்துவிடும் முடிவில் இருந்தேன்.கொஞ்சம் பயமாகதான் இருந்தது…என்ன செய்ய..விழுந்து விழுந்து காதலித்து கடைசியில் அவள் உங்களை “அண்ணன்” என்ற முறையில்தான் பழகினேன் என்று சொல்லி விட்டால்……
அதுசரி அவள் என் காதலை ஏற்றுக்கொள்வாளா என்ற சந்தேகமும் எனக்கு வந்தது. அவள் தேவதையைப் போல் இருந்தாள்.
என்னை பற்றி கொஞ்சம் சொல்லி கொள்கிறென்.[ சுமார் 6 அடி உயரத்தில் சும்மா கோதுமை கலரில், சல்மான் கான் போலவோ இல்லை சின்ன வயது கமலஹாசன் போல இருப்பேன் என்று சொன்னால்…அதுதான் இந்த இணையத்தில் இருக்கும் பபெரிய கதையாக இருக்கும்..
நான் 51/2 அடி உயரம், கருப்புக்கும் மாநிறத்த்க்கும் நடுவில்[ஹி ஹி… கருப்பதான்..] கொஞசம் ஒல்லியாக இருப்பேன்..ஆனால் மன தைரியம் கொஞசம் அதிகம்தான்..அதனால்தான் என்னவொ ப்ரியாவை காதலிக்கிறேன் என்று சொல்லுகிறேன்.
இன்னும் 2 நாளில் 10வது வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து விடும்.. அவளும் வந்து விடுவாள்…..

நான் பத்தாவது படிக்கும்போது கூட பரீட்சை அட்டவணையை நியூஸ்பேப்பரிலிருந்து எடுத்து நோட்புக்கில் ஓட்டிவைக்கவில்லை. ஆனால் இப்போது அவளுக்காக , அவள் வருகைக்காக இதை ஓட்டி வைத்து நாளை எண்ணிக்கொண்டு இருந்தேன்.. இன்னும் 2 நாள்கள் மட்டும் இருந்தது அவள் பரீட்சை முடிய,அந்த நாள் வியாழக்கிழமையாக வந்தது. பப்ரியாவின் அப்பா அனேகமாக சனிக்கிழமை கடைக்கு லீவு போட்டு அடுத்த நாள், அவளை கூப்பிட்டு வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் சனிகிழமை லீவு போடவில்லை.ஏனென்று எனக்கு காரணம் தெரியவில்லை.
அடுத்தநாள் மதியம் அவர் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்,நான் அவரிடம் சென்று “என்னஙக மாமா இன்னைக்கு லீவா? என்று கேட்டேன்.அவர் “இல்லை ராஜ் “ என்று சொன்னார்.எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
அடுத்த நாளும் அவர் லீவு போடவில்லை. எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல இருந்தது.அடுத்தநாளும் நான் முன்புகேட்டமாதிரியெ “என்னஙக மாமா இன்னைக்காவது லீவா?” என்று கேட்டேன்.”இல்லையே மாப்பிள்ளை ,, ஏன் என்ன விசயம்” என்றார்.நான் ஒன்றுமில்லை சும்மாதான் கேட்டேன்” என்றேன். “பார்த்தியாடி மாப்பிள்ளையை என்மேல் எவ்வளவு அக்கறை என்று? “ என்று ப்ரிய்யாவின் அம்மாவை பார்த்து சொன்னார்.
“ அது எல்லாம் ஒன்றுமில்லை..நீங்கள் லீவு போட்டு எப்ப ப்ரியாவை கூப்பிட்டுகிட்டு வருவிஙக “என்று கேட்க விரும்புவதைதான் அப்படி கேட்கிறாப்ல.. என்று சொன்ன ப்ரியாவின் அம்மா” சொந்த ஊரில்,பக்கத்து வீட்டில் நான் இருந்த்தால் உங்களுக்கு என்னை காதலிக்க சிரமமே இல்லாம போச்சு, ஆனா ராஜுக்கு அப்படியா? என்ன ராஜ்? என்றாள் என்னை பார்த்து…..எனக்கு எந்த பக்கம் ஒடுவது என்றே தெரியாமல் நின்றுக்கொண்டு இருந்தேன்
ஒ/ அப்படியா விசயம்? அவள் என் தம்பி விட்டிற்கு பெங்களுர் போய் இருக்காளே.. இங்க வர இன்னும் பதினைந்து நாளாவது ஆகுமே ராஜ்’ என்றார்..எனக்கு என்னவோ ஆயிற்று.” இல்லை அவள் என்னை காதலிக்கவில்லை.. அதனால்தான் அவள் இங்கு வராமல் அவள் சித்தப்பா விட்டிற்கு சென்று விட்டாள்” என்று என் ஓரு மனம் சொன்னது.
அவள் சித்தப்பா அவர் விட்டிற்கு வாம்மா என்று கூப்பிடும் போது இல்லை நான் ஒருவரை காதலிக்கிறேன் அவரை பார்க்கபோகிறேன் என்று சொல்லாவா முடியும்… அவள் பார்வையில் கண்டிப்பாக நான் காதலைப் பார்த்தேன் , அவள் வருவாள் என்னை காதலிப்பாள்” என்று இன்னொரு மனம் சொன்னது..
“காதலித்துப்பார் கையெழுத்து அழகாகும் “- வைரமுத்துவின் வைரவரிகள். எந்த நேரமும் கைலியும் புள்ளிவைத்தசட்டையும் இல்லை பூப்போட்ட சட்டையும் போட்டு இருந்த நான்..இப்போது கோடுபோட்ட அல்லது சிறுகட்டம் போட்ட சட்டையும்,பேண்ட்டும் போட்டு இருந்தேன்.பங்கரையாக இருந்த என் தலையை இப்போது ஸ்டெப் கட்டிங் செய்து இருந்தேன்.என்னை பார்க்கையில் எனக்கே வித்தியாசமாக இருந்தது.
அன்று செவ்வாய்க்கிழமை ப்ரியாவின் அப்பா காலை மதுரைச் செல்வதாககூறிச் சென்றார்.நான் காலையில்ருந்து கடையில்தான் இருந்தேன். மதியம் 3.00 மணி இருக்கும்,எங்கள்கடை இருக்கும் டவுன்பஸ் ஸ்டாப் அருகே ஒரு டவுண்பஸ் நின்றது, அதிலிருந்து ப்ரியா அப்பா இறங்கினார்,பின்னாலே ப்ரியாவும்ம்……
நான் கடைக்கு பின்னாடி ஒடிச்சென்று எண்ணெய் வழிந்த என் முகத்தை கழுவிப் புதுபொலிவுடன் வந்தேன்.
ப்ரியாவுடன் வந்த ப்ரியா அப்பா என்னைப்பார்த்து நமட்டு சிரிப்புடனே வந்தார்.

Leave a Comment